Latest News

July 11, 2016

நாமலை பார்க்க போகமாட்டேன் - மகிந்த
by admin - 0

நிதி மோசடி தொடர்பிலான விசாரணைக்காக  பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஶ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வருமான  நாமல் ராஜபக்ஷ பொலிஸ் விசாரணைப் பிரிவில் இன்று (11) ஆஜரான பின்னர் அவர் சற்றுமுன்னர் FCID யினரால் கைது செய்யபட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் நாமல் ராஜபக்ஷவை பார்க்க தான் FCID கோ நீதிமன்றுக்கோ செல்லப்போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

"நாமல் எனது புதல்வராக இருந்தாலும் அவர் ஒரு அரசியல்வாதி கடந்த காலங்களில் எனக்கு ஆறவைத்த பலர் கைது செய்யப்பட்டனர்.அவர்களை நான் பார்க்க FCID கோ நீதிமன்றுக்கோ செல்லவில்லை.அதனால் அரசியல்வாதியான நாமலுக்கும் அது பெருந்தும்" என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்படுவார் அவரை தயாராக இருக்குமாறு தான் கூறியதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments