பாரிஸ் சுபர்த்தனாவின் மற்றுமொரு துணிச்சலான வெளியீடு “ஐம்பதிலிருந்து அறுபத்தைந்துவரை” குறும்படம்! எம்மைச் சுற்றி நடக்கின்ற போது, நாம் பார்த்துவிட்டு முகம் சுழிக்கின்ற சம்பவங்களை. துணிச்சலோடு படமாக்கியிருக்கின்றார் இயக்குனர் கி.தீபன்.
கி.தீபனின் படைப்புகள் வெறும் பொழுது போக்கானவை அல்ல. உண்மைத்தன்மை உடையவை! எமக்குள்ளே கதை தேடி அதை படமாக்குகின்ற சிறப்பு அவரைச்சாரும் என்பதால்.
சுபர்த்தனா குழுமத்தில் இருந்து வெளிவந்த முன்னைய படைப்புகள் போன்றே, இதுவும் சமூக அக்கறையோடு வெளிவந்த படைப்பாக பார்க்க முடிகிறது.
இப்போதெல்லாம் தமிழ் சகோதரிகள் தனிமையில் சென்றாலோ, தனிமையில் குடியிருந்தாலோ, அவர்களை ஏதாவது ஒருமுறையில் சீரழிக்கவேண்டும் என்ற நோக்கோடு. தரித்திரக் குணம் கொண்டு சுற்றிவருகின்ற “ஐம்பதிலிருந்து அறுபத்தைந்துவரை” முதியவர்களை அவதானிக்கத்தான் முடிகிறது.
No comments
Post a Comment