Latest News

June 27, 2016

கிழக்கு லெபனானில் அடுத்தடுத்து 3 தற்கொலைப் படை தாக்குதல்: 6 பேர் பலி
by admin - 0

மத்திய தரைக் கடலை ஒட்டி சிரியாவிற்கு அருகில் உள்ள நாடு லெபனான். கிழக்கு லெபனானில் இன்று மூன்று தற்கொலைப் படை தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

கிழக்கு லெபனானில் உள்ள குவா என்ற கிராமத்தில் வீடு ஒன்றில் முதலில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. பின்னர், வெடிகுண்டு தாக்குதல் நடைபெற்ற இடத்தை பொதுமக்கள் பார்வையிட குவிய தொடங்கினர். அப்போது மேலும் அடுத்தடுத்து மூன்று பேர் கூட்டத்தின் நடுவே வெடிகுண்டுகளை வெடிக்க செய்தனர்.

இந்த மூன்று தற்கொலைப் படை தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டதாகவும், உயிரிழந்தவர்கள் அனைவரும் உள்ளூர் பொதுமக்கள் என்றும் கூறப்படுகிறது.

லெபனீஸ் ரெட் கிராஸ் அமைப்பின் பொதுச் செயலாளர் ஜார்ஜ் கெட்டனித் கூறுகையில், குறைந்தது எட்டு பேர் வரை தற்கொலைப் படை தாக்குதலில் கொல்லப்பட்டனர் என்று தெரிவித்தார். மேலும் 15 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சிலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளதாகவும் கூறினார்.

10 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்து இந்த தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இராணுவ வீரர்கள் மூன்று பேர் தாக்குதலில் காயமடைந்துள்ளதாகவும் லெபனான் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.
« PREV
NEXT »

No comments