Latest News

June 28, 2016

கிளிநொச்சி வர்த்தகர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள் - சிறீதரன் எம்.பி.
by admin - 0

கிளிநொச்சி வர்த்தகர்கள் உழைப்பால் உயர்ந்தவர்கள், உலகதரத்திற்கு உயர வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினரும் கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் கிளிநொச்சி வர்த்தக சமூக அபிவிருத்திச் சங்கத்தை ஆரம்பித்து வைத்துக் கருத்துச் தெரிவுக்கும் போதே மேற்படி கருத்துக்களைத் தெரிவித்மதார்.

கிளிநொச்சி வர்த்தக சமூக அபிவிருத்திச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருடங்களைக் கடந்துள்ள நிலையிலும் அதற்கென்றொரு நிரந்தரக் காணியோ நிரந்தர அலுவலகமோ இல்லாத நிலையில் காணப்பட்டது. இந்நிலையில் கிளிநொச்சி வர்த்தகர்களது கோரிக்கைக்கமைவாக கிளிநொச்சியில் பொருத்தமான காணியை இனங்கண்டு 8 பரப்புக் காணியை கிளிநொச்சி வர்த்தக சமூக அபிவிருத்திச் சங்கத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் உரிய முறைப்படி வழங்கியிருந்தார்.

அக்காணியில் கிளிநொச்சி வர்த்தக சமூக அபிவிருத்திச் சங்கத்தின் அலுவலகத்தை ஆரமப்பித்து வைத்து மேற்படி சங்கத்திற்கான பெயர் பலகை திறந்து வைக்கும் நிகழ்வு 25 ம் திகதி சனிக்கிழமை மாலை 2.30 மணிக்கு மேற்படி சங்கத்தின் தலைவர் இ.இராமன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு பெயர்ப் பலகையைத் திரைநீக்கம் செய்து வைத்த பாரளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மேற்படி கருத்துக்களை வர்த்தகர்கள் மத்தியில் கூறியிருந்தார்.

அவர் மேலும் அங்கு கூறுகையில், 

கிளிநொச்சி மாவட்ட வர்த்தகர்கள் கடந்த கால கொடிய யுத்தங்களால் அனைத்து வளங்களையும் இழந்த நிலையிலும் தமது தன்னம்பிக்கையாலும் அயராத உழைப்பினாலும் முன்னோக்கிச் சென்றுகொண்டிருக்கிறார்கள். ஆனாலும் எமது வர்த்தகர்கள் பல்வேறுபட்ட இடர்பாடுகளையும் வளப்பற்றாக்குறைகளையும் எதிர்நோக்கி கடுமையாக உழைக்க வேண்டியவர்களாகவே காணப்படுகின்றார்கள். இந்த உலகத்தில் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்றைக்கும் போற்றத்தக்க பெருமைக்குரியவர்கள். எமது வர்த்தகர்களும் உலக தரம்வாய்ந்தவர்களாக உயர வேண்டும்.

மூலப்பொருட்கள், முடிவுப்பொருட்கள், உற்பத்தித் தொழிநுட்பம், சந்தைப்படுத்தல், வாடிக்கையாளர் போன்றவற்றில் வர்த்தகம் தங்கியுள்ளது. உலகத்தில் எத்தனையோ வர்த்தகர்கள் பெயர் சொல்லுமளவுக்கு தமது உழைப்பால் உயர்ந்துள்ளார்கள். ஒரு காலத்தில் எமக்கென்றொரு நேர்த்தியாகத் திட்டமிடப்பட்ட பொருளாதாரக் கட்டமைப்புக் காணப்பட்டது. எமக்கென்றொரு கனவுள்ளது. எமக்கென்றொரு இலட்சியம் இருக்கின்றது. அது நிச்சயம் நிறைவேறும் என்ற அசையாத நம்பிக்கை எமக்குள்ளது. என்றார்.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் அ.வேழமாலிகிதன், கிளிநொச்சி வர்த்தக சமூக அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர் ப.கிரிதரன், வர்த்தகர்கள் எனப் பலரும்கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். 
« PREV
NEXT »

No comments