இவ் ஆர்ப்பாட்டமானது, இன்று 22ஆம் திகதி மதியம் ஒரு மணி தொடக்கம், மாலை நான்கு மணி வரை பிரித்தானியப் பிரதமர் வாயில் தளத்தின் முன் NO 10 DOWNING STREET WESTMINISTER, LONDON நடைபெற்றது.
இலங்கையில் தொடர்கின்ற கைதுகளைக் கண்டித்தும், வெள்ளைவான் கடத்தலுக்கு எதிராகவும், புலம்பெயர் தேசங்களில் இருக்கின்றவர்களை திருப்ப அனுப்ப வேண்டாம் என தெரிவித்தும் இக்கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.
இக் கோரிக்கைகளை பிரித்தானிய அரசிற்கு முன் வைக்கும் அதேநேரம், பிரித்தானிய அரசாங்கம் சிறிலங்கா அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்த கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்து. இதில் பல நூற்றுக்கணக்கானோர் கலந்து தமது எதிர்ப்பை வெளிப் படுத்தினர்
No comments
Post a Comment