சோனிய காந்தி கைது
ஹெலிகாப்டர் முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கண்டன பேரணி நடைபெற்றது. அப்போது தடையை மீறி நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக காங்கிரஸ் தலைவர்கள் செல்ல முயன்றனர். இதனையடுத்து பேரணியில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.அந்தோணி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் நாடாளுமன்ற காவல்நிலையத்தில் அடைக்கப்பட்டனர். பின்னர் அவர்கள் அனைவரையும் காவல்துறையினர் விடுதலை செய்தனர்.
No comments
Post a Comment