Latest News

March 21, 2016

தெஹிவளை நால்வர் மரணத்தில்: அதிர்ச்சித் தகவல் வெளியாகியது
by admin - 0

தெஹி­வளை – கவு­டான வீதியில் உள்ள மூன்று மாடி­களைக் கொண்ட வீடொன் றின் கீழ்மாடியில் இருந்து, பிர­பல வர்த்­தகர் ஒருவர் மற்றும் அவ­ரது குடும்­பத்தார் உட்பட நான்கு பேர் நேற்று சட­ல­ங்களாக மீட்­கப்­பட்­டுள்ள நிலையில், அதற்கான காரணம் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நேற்று காலை 10 மணிக்கு தெஹி­வளை பொலி­ஸா­ருக்குச் செய்­யப்­பட்ட முறைப்­பா­டொன்றை அடுத்தே குறித்த வர்த்­தகர், அவ­ரது மனைவி, அவர்­க­ளது மகள் மற்றும் அவர்­களின் உறவுக்காரர் ஒரு­வரின் மகள் ஆகியோரே இவ்­வாறு உயிரிழந்த நிலையில் மீட்­கப்­பட்­டுள்­ளனர்.

கொழும்பு கேஷர் வீதியில் பிர­பல இலத்­தி­ர­னியல் வர்த்­த­க­ரான ஹுசைன் மெள­லானா (வயது 65), முன்­ஸிரா மெள­லானா வயது (58), ஹுஸ்னா மெள­லானா (வயது 13) ஆகிய ஒரே குடும்­பத்­தைச் சேர்ந்­தோரும் அவர்­க­ளுடன் நேற்று முன் தினம் இரவு குறித்த வீட்டில் தங்­கி­யி­ருந்த அவர்­க­ளது உற­வுக்­கார சிறு­மி­யான நிஸ்னா மெள­லானா (வயது 13) என்ற சிறு­மி­யுமே இவ்­வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரி­வித்­தனர்.

நேற்று காலை 10. 00 மணிக்கு தெஹி­வளை பொலிஸ் நிலையம் சென்­றுள்ள, உயி­ரி­ழந்த வர்த்­த­கரின் முன் வீட்டில் வசிக்கும் உற­வுக்­காரர், தனது முன் வீட்டில் உள்ள உற­வி­ன­ருக்கு ஏதோ இடம்­பெற்­றுள்­ள­தா­கவும் அவர்கள் உடல் கருகி உயி­ரி­ழந்­துள்­ள­தா­கவும் முறை­யிட்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்து தெஹி­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பிரதீப் நிஸாந்­தாவின் கீழான பொலிஸ் குழு உடன் ஸ்தலத்­துக்கு சென்­றுள்­ளது.

பொலிஸார் அங்கு செல்லும் போதும் இலக்கம் 40 பீ, கவு­டான, தெஹி­வளை எனும் முக­வ­ரியில் உள்ள குறித்த மூன்று மாடி வீட்டின் கீழ் மாடியின் கத­வு­களை உற­வி­னர்கள் உடைக்க முயற்சி செய்­து­கொண்­டி­ருந்­துள்­ளனர். முழு­மை­யாக அடைக்­கப்பட்டு குளி­ரூட்­டப்பட்­டி­ருந்த அந்த வீட்டின் பிர­தான கதவை பொலி­ஸாரின் உத­வி­யுடன் உடைத்­துக்­கொண்டு உள்ளே சென்ற போதே நால்­வரும் சட­ல­மாக இருந்தமை உறு­தி­யா­னது.

பொலிஸார் உள்ளே சென்று பார்த்த வேளையில் வர்த்­த­க­ரான ஹுஸைன் மெள­லானா பிர­தான கத­வ­ருகே உள்ள கதி­ரை­யொன்­றிலும், அவ­ரது மனை­வி­யான முன்­ஸிரா மெள­லானா வீட்டின் அறை­யொன்­றிலும் 13 வய­து­களை உடைய இரு சிறு­மி­களும் வீட்டின் பிர­தான அறையின் நிலத்­திலும் உயி­ரி­ழந்த நிலையில் இருந்­தனர்.

வீட்டில் இருந்த பெண்ட்ரி கபட் ஒன்று தீயினால் சேத­ம­டைந்­தி­ருந்­ததை அவ­தா­னித்த பொலிஸார் அதன் அருகே இருந்த இலத்­தி­ர­னியல் அவன், பிளெக் டொப் ஆகி­னவும் தீயினால் கரு­கி­யிருந்­ததை அவ­தா­னித்தனர்.

அத்­துடன் வீட்டின் சுவர், நிலத்தில் கறுப்பு நிர துகல்கள் ஒட்­டி­யி­ருந்த நிலையில் ஆங்­காங்கே அதில் கை அச்­சுக்கள் பதி­வா­கி­யி­ருந்­தன. அத்­துடன் எரிந்­தி­ருந்த பிளக் டொப் வீசுண்­டி­ருந்­த­துடன் வீட்டின் மின் கட்­ட­மைப்பில் இருந்த ரிப் ஆளி­களில் இரண்டு கீழ் நோக்கி வீழ்ந்­தி­ருந்­தன. இதன் ஊடாக ஏதோ ஒரு கார­ணத்தால் மின் தடைப் பட்­டுள்­ளமை பொலி­ஸா­ரினால் ஊகிக்­கப்­பட்­டது.

ஸ்தலத்­துக்கு விரைந்த தெஹி­வளை பிர­தே­சத்­துக்கு பொறுப்­பான உதவி பொலிஸ் அத்­தி­யட்சர் ரஞ்சித் கொட்­டச்­சியின் நேரடி கட்­டுப்­பாட்டில் தெஹி­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோ­தகர் பிரதீப் நிஸாந்­தவின் தலை­மையில் குற்­ற­வியல் பிரிவின் அதி­கா­ரி­க­ளினால் மேல­திக விசா­ர­ணைகள் ஆரம்­பிக்­கப்­பட்­டன.

பொலிஸ் தட­ய­வியல் பிரி­வினர் ஸ்தலத்­துக்கு வருகை தந்­த­துடன் அரச இர­சா­யன பகுப்­பாய்­வா­ளர்கள், மின்­னியல் பொறி­யி­ய­லா­ளர்­களும் ஸ்தலத்­துக்கு வர­வ­ழைக்­கப்­பட்­டனர். இதனைத் தொடர்ந்து பொலிஸார் மேல­திக விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தனர்.

இதன் போது நேற்று முன் தினம் இரவு 9.00 மணி­ய­ளவில் குறித்த வீட்டின் முன் வீட்டில் வசிக்கும் உயி­ரி­ழந்த வர்த்­த­கரின் உற­வி­னர்­க­ளுடன் இந்த குடும்­பத்தார் உரை­யா­டி­யுள்­ளனர். அதன் பின்னர் இரு குடும்­பத்­தாரும் நித்­தி­ரைக்கு சென்­றுள்­ளனர்.

உயி­ரி­ழந்த வர்த்­த­கரின் மகளும் அங்கு தங்­கி­யி­ருந்த உற­வுக்­கார சிறு­மியும் நார­ஹேன்­பிட்டி பகு­தியில் உள்ள பிர­பல சர்­வ­தேச பாட­சா­லையில் கல்­வி­கற்று வரு­கின்­றனர். இந் நிலையில் நேற்று காலை அவர்­களை பாட­சா­லைக்கு அழைத்துச் செல்லும் வண்டி வீட்டின் அருகே வந்­துள்­ளது. வண்டி ஒலி எழுப்­பியும் வீட்டில் இருந்து எவ்­வித பதி­லும் கிடைக்­க­வில்லை.

இந் நிலையில் முன் வீட்டில் வசிக்கும் உற­வுக்­கா­ரர்கள் குறித்த வர்த்­த­க­ருக்கு தொலை­பேசி அழைப்­பையும் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளனர். எனினும் அதற்கும் பதி­ல­ளிக்­கப்­ப­ட­வில்­லை. இத­னை­ய­டுத்து அவ்­வீட்டார் முன் வீட்டை நோக்கி சென்ற போது அங்கு கறுப்பு நிற துகல்கள் உள்­ளி­ருந்து கதவின் கீழால் உள்ள சிறிய இடை­வெ­ளி­யூ­டாக கசி­வதை அவ­தா­னித்­துள்­ளனர்.

இந் நிலை­யி­லேயே அது தொடர்பில் பொலி­ஸா­ருக்கு தகவல் அளித்­துள்­ள­துடன் கதவை உடைக்கும் நட­வ­டிக்­கை­யிலும் ஈடு­பட்­டுள்­ளனர். இவ்­வி­டயம் பொலிஸ் விசா­ர­ணை­களில் இருந்து தெரி­ய­வந்­துள்­ளது.

குளி­ரூட்­டப்­பட்ட அந்த வீடா­னது முழு­மை­யாக சீல் செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில், திடீ­ரென எற்­பட்ட மின்­னொ­ழுக்கு கார­ண­மாக ஏற்­பட்ட புகை­யுடன் கூடிய விஷ வாயுவை அவர்கள் சுவா­சித்­தி­ருக்­கலாம் எனவும் அதன் கார­ண­மாக மூச்சுத் திணறி அவர்கள் உயி­ரி­ழந்­தி­ருக்க வேண்டும் எனவும் பொலிஸார் சந்­தே­கிக்­கின்­றனர்.

வர்த்­த­கரின் மனைவி முன்­ஸிரா மெள­லானா அறையில் மர­ண­ம­டைந்­தி­ருந்த விதம், இரு சிறு­மி­யரும் வீட்டின் பிர­தான அறையில் அரு­க­ருகே முகங்­குப்­பற விழுந்­தி­ருந்த நிலைமை, வர்த்­த­க­ரான ஹுசைன் மெள­லானா கதி­ரையி­லேயே உயி­ரி­ழந்­தி­ருந்­தமை ஆகி­ய­வறறை வைத்தே பொலிஸார் இவ்­வாறு சந்­தேகம் தெரி­விக்­கின்­றனர்.

வீட்டின் சுவர்­களில் படிந்­தி­ருக்கும் கறுப்பு நிற துகல்கள் மின்­னொ­ழுக்கு கார­ண­மாக ஏற்­பட்ட தீயினால் ஏற்­பட்­ட­தாக இருக்க வேண்டும் என சந்­தே­கிக்கும் பொலிஸார், தீ பரவ ஆரம்­பித்த போது முழு வீட்­டையும் புகை சூழந்­து­கொன்­டி­ருக்க வேண்டும் எனவும், வீடு முழு­மை­யாக குளி­ரூட்­டப்பட்­டி­ருந்­த­தாலும் அப்­புகை வெளி­யே­றாமல் வீட்­டுக்­குள்­ளேயே சுற்ற அது விஷ­மாக மாறியி­ருக்கும் எனவும் சந்­தே­கிக்­கின்­றனர்.

அதனை வீட்டில் இருந்த இந் நால்­வரும் சுவா­சித்­தி­ருப்­ப­தாக நம்பும் பொலிஸார் அங்­கி­ருந்து தப்ப அவர்கள் முயற்­சித்­துள்­ள­தா­கவும் தெரி­விக்­கின்­றனர். எனினும் வீட்டை முழு­மை­யாக சூழந்­தி­ருந்த புகையால் அவர்­க­ளுக்கு கத­வினை நோக்கி செல்­வது சிர­ம­மாக இருந்­தி­ருக்க வேண்டும் எனவும் சிறு­மிகள் இரு­வரும் முகங்­குப்­பற வீழ்ந்­தி­ருந்­த­மை­யா­னது அவர்கள் தப்­பிக்க ஓடி­யுள்­ளதை காட்டுவதா­கவும், வர்த்­த­கரும் கதவை திறக்க முயன்­றுள்ள நிலை­யி­லேயெ அதன் அருகே இருந்த கதி­ரை­யி­லேயே உயிரை விட்­டுள்­ள­தா­கவும் சந்­தே­கிப்­ப­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் பொலிஸ் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

எவ்­வ­றா­யினும் குறித்த நால்­வரும் எதனால் உயி­ரி­ழந்­தார்கள் என்ற உறு­தி­யான காரணம் நேற்று மாலை வரை தெரி­ய­வ­ர­வில்லை.

நேற்று பிற்­பகல் ஸ்தலத்­துக்கு கல்­கிஸை மேல­திக நீதிவான் ஜி.ஜி.எஸ். ரண­சிங்க வருகை தந்து சட­லங்­களை பார்­வை­யிட்டார். இதன் போது சட­லங்­களை பிரேத பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­து­மாறு அவர் உத்­தரவு பிறப்­பித்தார். இந் நிலையில் நேற்று மாலை களு­போ­வில போதனா வைத்­தி­ய­சா­லையின் சட்ட வைத்திய அதி­கா­ரியும் ஸ்தலத்திற்கு விரைந்து பார்­வை­யிட்­ட­துடன் சட­லங்­க­ளையும் பொறுப்­பேற்று பிரேத பரி­சோ­த­னை­க­ளுக்­கக கலுபோ­வில வைத்­தி­ய­சா­லைக்கு எடுத்துச் சென்றார்.

எவ்­வா­றா­யினும் இந்த நான்கு மர­ணங்­களும் வெளியில் இருந்து வந்த ஒரு­வரால் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது என்­ப­தற்­கான எவ்­வித சான்­று­களும் இல்லை என தெரி­விக்கும் தெஹி­வளை பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி பிர­தான பொலிஸ் பரி­சோத்கர் பிரதீப் நிஸாந்த, திடீ­ரென ஏற்­பட்ட மின்­னொ­ழுக்­கினால் உரு­வான விஷ வாயுவை இவர்கள் சுவா­சித்­தி­ருக்­கலம் எனவும் அதனால் ஏற்­பட்ட மூச்சுத் திண­றலால் மரணம் சம்­ப­வித்­தி­ருக்­கலாம் எனவும் நம்­பு­வ­தாக குறிப்­பிட்டார்.

எனினும் பிரேத பரி­சோ­த­னையின் பின்­ன­ரேயே உறு­தி­யான உண்மைக் கார­ணியை கண்­ட­றிய முடி­யும் என சுட்­டிக்­காட்­டிய அவர் சதி முயற்சி ஒன்­று­டாக இம்­ம­ர­ணங்கள் நிகழ்ந்­துள்­ள­மைக்­கான வாய்ப்புக்கள் மிக மிக குறைவானது என சுட்டிக்காட்டினார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைமேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர, கொழும்பு பிரதிப் பொலிஸ் மா அதிபர் காமினி மத்துரட்ட ஆகியோரின் மேற்பார்வையில் கல்கிஸை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சரின் கீழ், உதவி பொலிஸ் அத்தியட்சர் ரஞ்சித் கொட்டச்சியின் ஆலோசனையில் தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரதீப் நிஸாந்த தலமையிலான பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கௌடான வீதியில் நேற்று இச்சம்பவத்தையு அடுத்து நூற்றுக்கனக்கான பொது மக்கள் கூடினர். அப்பிரதேசத்தில் பாரிய போக்கு வரத்து நெரிசலும் காணப்பட்டது.
« PREV
NEXT »

No comments