இந்த காலத்தில் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் படங்களை கீழ் காணலாம். அதில் சிங்களே என்ற வசனம் எழுதப்பட்டுள்ளது.
கீழ் உள்ள இரண்டு படங்களும் ஒன்றுக்கு ஒன்று சமமானது.
'முதல் படத்தில் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கப்படுவதற்கு முன்னர் ஜேர்மனியர்கள் யூதர்களின் வீட்டு கேட்டுகளில், கதவுகளில் சில விளம்பரங்களை பலாத்காரமாக எழுதும் காட்சியாகும். இரண்டாம் படத்தில் இலங்கையில் சிறுபான்மை மக்களின் வீட்டு கேட்டில் பலாத்காரமாக எழுதி வைக்கப்பட்டுள்ள காட்சியாகும்'.
'இடது பக்கம் உள்ள படத்தின் விளைவாக ஜேர்மனில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அநியாயமாக கொலை செய்யப்பட்டனர். வலது பக்கம் உள்ள படத்தின் மூலம் அவ்வாறான அழிவு ஏற்பட அல்லது தவிர்க்க உங்கள், எங்கள் எதிர்கால செயற்பாடுகள் காரணமாக அமையும்'.
'நம்மை கடந்து போகும் ஒவ்வொரு நொடியும் வரலாற்றில் எழுதப்படுகிறது'.
No comments
Post a Comment