Latest News

January 02, 2016

லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் தபால் அட்டைப் பரப்புரை
by admin - 0

கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டங்களையும், தபால் அட்டைப் பரப்புரை யொன்றினையும் மேற்கொண்டு வரும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயல்முனைப்பின் தொடர்ச்சியாக நேற்று(01/01/2016)  தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகளை போர்க்கைதிகளாக அங்கீகரித்து, அவர்களது பாதுகாப்பினையும் விடுதலையினை உறுதிப்படுத்துமாறு அனைத்துலக சமூகத்தினை கோரும்  தபால் அட்டைப் பரப்புரையொன்றினை லண்டன்  ஈலிங்  ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில்  மேற்கொண்டனர் இதில் பல மக்கள் கலந்து கொண்டு தங்களின் பங்களிப்பை உறுதிப்படுத்தினர் .

இதேiவேளை கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தி முன்னெடுக்கபட்டு வரும் தபால் அட்டைப் பரப்புரையில் பங்கெடுத்துக் கொள்ள முடியாதவர்கள் குறித்த

UN High Commissioner for Human Rights, the Honorable Zeid Ra’ad Al Hussein: Sri Lanka: Release All Tamil POWs immediately



இந்த இணைப்பின் வழியே பங்கெடுத்துக் கொள்ள முடியுமென நா.தமிழீழ அரசாங்கத்தின் ஊடகம் மற்றும் பொது விவகாரங்களுக்கான அமைச்சு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது 














« PREV
NEXT »

No comments