Latest News

December 31, 2015

மஹிந்த மைத்திரி சந்திப்பு
by admin - 0

ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், ஸ்ரீலங்கா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷம் இன்று (வியாழக்கிழமை) எதிர்பாராத விதமாக ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

ஸ்ரீ லங்கா அமரபுர மகா சங்க சபையின் அதிசங்கைக்குரிய மகா நாயக்க தவுல்தென ஞானிஸ்ர தேரரின் நூறாவது ஜனன தின நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்விலேயே மைத்திரிபாலவும், மஹிந்தவும் சந்தித்துக் கொண்டுள்ளனர்.

இதன்போது மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தை கடுமையாக விமர்சித்து வரும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவும் உடனிருந்தார்.

« PREV
NEXT »

No comments