Latest News

November 25, 2015

ஜேர்மனி வூப்பற்றால் ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலயத்தினரின் நிதி உதவியால் நிவாரண உதவிகள் -த.தே.ம.முன்னணி
by admin - 0

தாயகத்தில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜேர்மன் நாட்டின் வூப்பற்றால் நகரில் உள்ள ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலயத்தினரின் நிதி உதவியால் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. 

அண்மையில் பெய்த  மழை காரணமாக வெள்ளநீர் வீடுகளுக்குள் புகுந்ததால் இடம்பெயர்ந்து பொது இடங்களில் தங்கியிருந்த  மக்களுக்கு வூப்பற்றால்  ஸ்ரீ நவதுர்க்கா தேவி ஆலயத்தினரின் நிதி உதவியிலிருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரால் முதற் கட்டமாக   200 குடும்பங்களுக்கு கடந்த 17-11-2015 அன்று  அரிசி, பருப்பு, நூடில்ஸ் உள்ளிட்ட  நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. 

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உபதலைவி திருமதி பத்மினி சிதம்பரநாதன் உள்ளிட்ட கட்சி அங்கத்தவர்களால் மேற்படி உதவிகள் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. 

















« PREV
NEXT »

No comments