Latest News

November 15, 2015

சுவிஸில் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலையை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றுள்ளது
by admin - 0

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி நடத்தும் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று சனிக்கிழமை மாலை 5 .30 மணியளவில் சுவிஸ் சூரிஸ் நகரில் கவனஈர்ப்பு போராட்டம் நடைபெற்றுள்ளது.
 
சுவிஸ்ஈழத்தமிழரவை ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த போராட்டததுக்கு கைதிகளின் உறவினர்கள் தமிழ் மக்கள் என பலர் கலந்துகொண்டு தமிழ் அரசியல் கைதிகளின் போராட்டத்திற்கு  தமது ஆதரவை தெரிவித்து போராட்டங்களை மேற்கொண்டனர்.

 "நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள எமது உறவுகளை உடன் விடுதலை செய்" ,
 
"தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு மட்டுமே ஒரே தீர்வு" , 

"கொலைகாரர்களுக்கு சுகந்திரம் அப்பாவிகளுக்கு சிறையா"

 போன்ற  கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை மேற்கொண்டனர் அத்துடன் சுவிஸ் அரசுக்கு தமிழ் அரசியல்கைதிகள் விடுதலை தொடர்பாக மகஜர்களையும் வழங்கவுள்ளனர் அவசியம் கருதி அவசரமாக மேற்கொண்ட போராட்டம் என்பது குறிப்பிடதாக்கது,






« PREV
NEXT »

No comments