Latest News

December 01, 2015

திருமலை ரகசிய தடுப்பு முகாமில் எலும்புக்கூடுகள்
by admin - 0

திருமலை ரகசிய தடுப்பு முகாமில் எலும்புக்கூடுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் காணாமல் போனோர் தொடர்பான ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் அண்மையில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

அவர்களின் விஜயத்தின் ஒரு கட்டமாக திருகோணமலை கடற்படை முகாமிலும் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதன் போது முகாமுக்குள் அமைக்கப்பட்டிருந்த நிலக்கீழ் ரகசிய தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதைக் கூடங்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.அத்துடன் குறித்த சித்திரவதைக் கூடங்களில் இருந்து மனித எலும்புக் கூடுகளும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.

இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களப் பொலிசார் பொலிஸ் மா அதிபருக்கு அறிவித்திருந்ததுடன், எலும்புக்கூடுகளையும் தமது பொறுப்பில் எடுத்திருந்தனர்.

தற்போது குறித்த எலும்புக்கூடுகள் தொடர்பில் இரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனை மேற்கொள்ளுமாறு கொழும்பு, கோட்டை மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருகோணமலை கடற்படை முகாமில் கண்டெடுக்கப்பட்ட எலுமபுக்கூடுகள் தொடர்பில் ரசாயனப் பகுப்பாய்வு பரிசோதனை நடத்த கொழும்பு கோட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments