Latest News

October 23, 2015

விமல் ஏன் அவசரமாக வெளிநாடு புறப்பட்டார்? இரகசியம் கசிவு
by Unknown - 0

ஜெனீவா பிரேரணை தொடர்பில் பாராளுமன்றத்தில் இரண்டு நாள் விவாதம் நடைபெற்று வரும்வேளையில் அதில் கலந்துகொள்ளாமல் விமல் வீரவங்ச வெளிநாடு செல்ல தயாரானதற்குரிய காரணம், இத்தாலியிலுள்ள புலி உறுப்பினர்களை அவசரமாக சந்திப்பதற்காகும் என வெளிவிவகார பிரதி அமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச இத்தாலியிலுள்ள புலி உறுப்பினர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவிருந்ததற்கான முக்கிய பல தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும், இதற்காக அவர் இரு பயணச் சீட்டுக்களை பயன்படுத்த தயாராக இருந்ததாகவும் பிரதி அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments