Latest News

October 18, 2015

மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகத்தின் வடமாகாண மகுடம் உதைபந்தாட்டத் தொடர்
by admin - 0

வடமராட்சி மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம் வடமாகாண மகுடம் உதைபந்தாட்டத் தொடர் நேற்று மாலை 3-00 மணிக்கு  ஆரப்பமாகியது வடமாகாணத்தின் முன்னணி கழகங்கள் பங்குபெற்றும் இத்தொடரில் 
வடமராட்சி 12 
மன்னார் 10 
கிளிநொச்சி 6 
பருத்தித்துறை 6 
யாழ்ப்பாணம் 4
வலிகாமம் 4
முல்லைத்தீவு 2 

ஆகிய லீக்கிகளில் இருந்து முன்னணி அணிகள் தெரிவுசெய்யப்பட்டு போட்டிகள் நடைபெறுகின்றது.

நேற்று மாலை நடைபெற்ற ஆரம்ப விழா கழக தலைவர் த.வேணுகானன் தலைமையில் நடைபெற்றது.

இவ்விழாவுக்கு விருந்தினராக வடமாகாண சபை உறுப்பினர்கள் வே .சிவயோகன் ச.சுகிர்தன் டிம் .வேதாபரணம் ரி.வரதராஜான் ஆயோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நேற்று நடைபெற்ற ஆரம்ப ஆட்டத்தில் நவிண்டில் கலைமதி அணியை எதிர்த்து கிளிநொச்சி வலைப்பாடு அணி மோதியது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 2-4 என்ற கோல் கணக்கில் நவிண்டில் கலைமதி வெற்றிபெற்று அடுத்த சுற்றுக்கு தெரிவாகியது.

 இரண்டாவது போட்டியில் மன்னார் தோட்டவெளி எதிர் வல்வெட்டி கருணாகரன் அணிகள் மோதினர் ஆட்டம் தொடங்கிய முதல் இறுதிநிமிடம் வரை பரபரப்பாக ஆட்டம் நடைபெற்றது முதல் சுற்றில் கருணானகரன் 3 கோல்களை பெற்று முன்னணில் இருந்தது இரண்டாம் சுற்று ஆட்டத்தில் 3-4 என்ற கோல்கணக்கில் மன்னார் வலைப்பாடு அணிவெற்றிபெற்று அடுத்த சுற்றப்போட்டிக்கு தெரிவாகியது இன்றைய போட்டிகள் பி ப 3-30 மணிக்கு அல்வாய் மனோகரா எதிர் கிளிநொச்சி இளம்தளிர் இரண்டாவது போட்டி4-30 மணிக்கு  வல்வெட்டித்துறை ஆதிசக்தி எதிர் மன்னார் விடத்தல்தீவு அணிகள் மோதவுள்ளது இத்தொடரின் அரையிறுதி  இறுதிப்போட்டிகள் மின்னொளியில் நடைபெறவுள்ளது








« PREV
NEXT »

No comments