எதிர்பாக்கப்பட்ட மனிதவுரிமை ஆர்வலருமான ஹரி ஆனந்தசங்கரி ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் அமோக வெற்றியீட்டியுள்ளார்.
ஹரி ஆனந்தசங்கதியின் இராஜாங்க மற்றும் பண்பான அணுகுமுறைகளை அறிந்திருந்த தமிழ்க் கனேடியர்கள் உள்ளிட்ட கனடியர்கள் அவருக்கு பெரிய அளவில் இத் தேர்தலில்வாக்களித்து பல ஆயிரக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் அவரை வெல்ல வைத்தனர்.
ஹரி ஆனந்தசங்கரிக்கெதிராக இனவாதம் கலந்த வகையில் பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தபோதும், அவருக்கு மக்கள் வாக்களித்து வெற்றி பெற வைத்துள்ளனர்.
கனடியப் பல்லினத்தவரிடையே மாத்திரமல்லாது, உலகத் தமிழ் தலைவர்களிடமும் மிகுந்த நட்பைப் பேணும் ஹரி ஆனந்தசங்கரி லிபரல் கட்சியின் வேட்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான தேர்தலில் போட்டியிட்ட போதும் இதேபோலவே அவரிக்கெதிரான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அதனை முறியடித்து அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
இந்தக் கட்சியின் சார்பான வேட்பாளராகத் தெரிவுசெய்யப்படுவதற்கான கட்சி உள்ளகத் தேர்தலின் போது, உலகத் தமிழர் பேரவை வன.பிதா. இமானுவேல், கௌரவ இரா.சம்பந்தன் உள்ளிட்ட 72 தலைவர்கள் ஹரி ஆனந்தசங்கரியை ஆதரித்தது ஒரு மாறுபட்ட நிகழ்வாக அன்றைய காலகட்டத்தில் பார்க்கப்பட்டது.
இன்று அத்தெரிவுகள் சரியானவை என்பதை நிரூபிப்பதாக அவர் பெற்ற வெற்றியுள்ளது. வெற்றிக் கொண்டாடங்கள் ஸ்காபரோ நகரத்தின் பாரிய மண்டபமொன்றில் வெகு உற்சாகத்தோடும் பலரது பங்களிப்போடும் இடம்பெற்று வருகின்றது.
No comments
Post a Comment