இலங்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை வரவேற்றுள்ள பிரித்தானிய அரசாங்கம் அவ்வறிக்கை தொடர்பாக தாம் முழுமையான கவனத்தை செலுத்துவதாக தெரிவித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள பிரித்தானியா வெளிவிவகார, கொமன்வெல்த் பணியக அமைச்சர் ஹியூகோ ஸ்வயர்,
இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடையங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையுடனும், இலங்கை அரசாங்கத்துடனும் தாம் இணைந்து பணியாற்றுவதற்கு எதிர்பார்த்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இதுவரை காலமும் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கும், அதன் மூலம் ஏற்பட்ட பிணக்குகளுக்கும் நிலையான அமைதியான மற்றும் செழிப்பான வகையில் இலங்கையில் இனங்களுக்கிடையில் இணக்கப்பாட்டினை கொண்டுவர முடியும் என நாம் நம்புகின்றோம்.
இன்று ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமை ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையை வரவேற்பதுடன், இதுவரை காலமும் இலங்கை தொடர்பான விவகாரங்களை மையப்படுத்தி செயற்பட்டவர்களுக்கும் ஆணைக்குழுவினருக்கும் நாம் மதிப்பளிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment