Latest News

September 05, 2015

சுவிஸ் நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் தர்சிகாவை ஆதரிப்போம்!
by Unknown - 0

சுவிஸ் நாட்டில் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடும் தர்சிகா அரசியலில் புதிய முகம் ,அவரின் எதிர்கால செயற்பாடுகளுக்கு தமிழர்கள் அனைவரும் ஆதாரவு வழங்கவேண்டிய தார்மீக கடமைப்பாடு அனைவருக்கு உண்டு. இந்த முறை தேர்தலை எதிர்நோக்கியுள்ள தர்சிகா பேர்ன் மண்டல்தில் சொசலிச சனநாயக கட்சி சர்பாக போட்டியிடுகின்ற இந்த கட்சியில் நீண்டகால அரசியல் அனுபவம் உள்ளவர்கள் தற்போது போட்டியிடுகின்றார்கள்.

அதேபோன்று எதிர்கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களும் நீண்டகால அரசியல் அனுபவங்களை கொண்டவர்கள் அத்துடன் ஊடகப்பலம் பணபலம்  சொந்த நாட்டு மக்களின் செல்வாக்கு போன்ற பல காரங்களை தர்சிகா எதிர்கொண்டுதான் இந்த தேர்தலை எதிர்நோக்கியுள்ளர்.

ஊடக பலம் பணம் ஆதாரவளர்கள் போன்ற குறைபாடுகளுடன் தான் தற்போது துனிந்து தேர்தலில் போட்டியிடுகின்றார். பேர்ன் மண்டலத்தில் வாழத்துவரும் சுவிஸ் குடியுரிமை உள்ள தமிழர்கள் அனைவரும் ஒற்றிணைந்து தர்சிகாவுக்கு ஆதாரவாக வாக்களித்தால் அவரது கட்சியின் ஆதாரவுடன் வெற்றி பெறும் சந்தப்பம் உள்ளது. அவருடைய கட்சியின் கொள்கையும் அனைவரும் ஏற்றுகொள்ளகூடியாது சமஉரிமை சமவாய்ப்பு புலம்பெயர் மக்களின் நலம்சாரந்தும் மனித நேயம் சார்ந்து பல திட்டங்களையும் ஈழத்தமிழர்களின் குரலாகவும் தனது தேர்தல் கொள்கையில் தெரிவித்துள்ளார். எனவே தமிழரின்வாக்குகளை நம்பி தேர்தலில் களமிறங்கியுள்ள தர்சிகாஅவர்களை வெற்றிபெறவைப்பது தமிழர்களின் கடமைப்படகும் பொறுந்திருந்து பார்போம் தேர்தல் முடிவுகளை.
« PREV
NEXT »

No comments