இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில், சர்வதேச விசாரணையை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி இன்றும் கையெழுத்துக்கள் பெறப்பட்டன.
14ஆவது நாளான இன்றைய தினம் யாழ் – குருநகர் பகுதியில் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்பட்டது.
இன்றுடன் நிறைவுபெற்ற இந்த நடவடிக்கையின் ஊடாக இதுவரை ஒன்றரை இலட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கான தமிழர் செயற்பாட்டுக் குழு தெரிவித்தது.
“சர்வதேச மனிதாபிமானம் மற்றும் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறைக்கான பொறிமுறையை ஸ்தாபிக்குமாறு ஐக்கிய நாடுகள் சபையை வலியுறுத்துகின்றோம்” என்ற தொனிப்பொருளின் கீழ் கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டன.
No comments
Post a Comment