இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச பொறிமுறையின் கீழ் சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி இன்று மன்னாரில் கையெழுத்து வேட்டை இடம்பெற்றது.
மன்னார் பிரஜைகள் குழு மற்றும் சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையும் தமிழர் செயற்பாட்டுக்குழுவும் இணைந்து குறித்த கையெழுத்து வேட்டையினை ஆரம்பித்து வைத்துள்ளனர்.
மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை இம்மானுவேல் செபமாலை அடிகளாரின் தலைமையில் இடம்பெற்ற குறித்த கையெழுத்து வேட்டையில் தமிழ்த் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரன், வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், மன்னார் பிரதேச சபையின் முன்னாள் தலைவர் மாட்டீன் டயேஸ், முன்னாள் உப தலைவர் அந்தோனி மார்க், மன்னார் சமாதான அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனி மார்க், எழுத்தாளர் வி.எஸ்.சிவகரன், வடமாகாணத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்களது குடும்பங்களின் சங்க பிரதி நிதிகள் எனப் பலர் கலந்து கொண்டு கையெப்பமிட்டனர்.
No comments
Post a Comment