Latest News

September 03, 2015

சம்பந்தன் நியமனம்-குழப்பத்தில் பாராளுமன்றம்
by admin - 0

8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.


சபாநாயகர் இவ்வறிப்பை இன்று மேற்கொண்டார். இந்நிலையில் சம்பந்தனின் நியமனத்தை அடுத்து இன்று சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவுக்கு எதிர் கட்சி தலைவர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்து, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் 56 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றும் கடந்த தினம் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

எனினும் சம்பந்தன் இன்று எதிர்க்கட்சித்தலைவராக சபாநாயகரால் அறிவிக்கப்பட்டமை தொடர்பில் விமல் வீரவன்ச அதிருப்தியை வெளியிட்டதுடன் பாராளுமன்றத்தில் குழப்பமான சூழ்நிலையும் ஏற்பட்ட து. எனினும் இதன்போது எழுந்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பில் ஜனாதிபதியிடம் நேற்று பொலன்நறுவையில் வைத்து கேட்டிருக்கமுடியுமென தெரிவித்தார்.

கட்சித்தலைவருக்கே கடிதத்தை நீங்கள் வழங்கியுள்ளதாகவும், சபாநாயகருக்கு இல்லையெனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.  

இதன்போது  கருத்து தெரிவித்த சபாநாயகர் கடிதம் தமக்கு கிடைக்கவில்லையென தெரிவித்தார். 

« PREV
NEXT »

No comments