Latest News

September 09, 2015

முதலமைச்சரை நீக்க மக்கள் எதிர்ப்பு - சமாளிக்க கலைக்கப்படும் வடமாகாணசபை?
by admin - 0

வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களை நீக்கும் முடிவு தமிழ் மக்களின் பெரும் எதிர்ப்பை கூட்டமைப்புக்கு உருவாக்கும் என்பதால் ரணிலுடன் ஶ்ரீலங்கா எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன் அவர்கள் இரகசிய சந்திப்பை மேற்கொண்டு வடமாகாணசபையை மத்திய அரசின் மூலம் கலைத்து புதிய முதலமைச்சரை மீண்டும் தெரிவு செய்ய ஶ்ரீலங்கா எதிர்க்கட்சி தலைவர் திட்டமிட்டுள்ளளார்.

இதற்காக ஶ்ரீலங்கா பிரதமர் ரணிலை சந்தித்த எதிர்கட்சி தலைவர் தனது வேண்டுகோளை தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணிலுடன் முன்னரே முரண்பட்ட முதலமைச்சர் விக்னேஸ்வரனை எப்படி பழிவேண்டலாம் என பார்த்திருந்த  ரணில் உடனடியாக எதிர்கட்சி தலைவரின் கோரிக்கையை ஏற்று வடமாகாணசபையை  கலைக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
« PREV
NEXT »

No comments