Latest News

September 12, 2015

கொட்டதெனியாவயில் காணாமற்போன பெண் குழந்தை தொடர்பில் தகவல் வழங்குமாறு கோரிக்கை
by Unknown - 0

கொட்டதெனியாவ, படல்கம பகுதியில் காணாமற்போன நான்கரை வயது பெண் குழந்தை தொடர்பிலான தகவல்கள் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த பெண் குழந்தை தனது பெற்றோருடன் நேற்றிரவு உறங்கிக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் காணாமற்போயுள்ளது.

சிறுமி காணாமற்போனமை தொடர்பில் கொட்டதெனியாவ பொலிஸ் நிலையத்தில் இன்று (12) காலை 7 மணியளவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குழந்தை தொடர்பிலான தகவல்கள் தெரிந்திருப்பின் 033-2240050, 0718591632 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பை மேற்கொண்டு தெரியப்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
« PREV
NEXT »

No comments