Latest News

September 18, 2015

யாழில் கொள்ளையர்கள் அட்டகாசம்
by admin - 0

கொக்குவில் கிருபாகரசுவாமி (புதுக்கோவில்) ஆலயத்துக்கு அருகிலுள்ள வீடொன்றுக்குள் வியாழக்கிழமை (17) அதிகாலை, 6 ½ பவுண் நகைகள், 40 ஆயிரம் ரூபாய் பணம் என்பன திருடப்பட்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தருணத்தில் வீட்டுக்குள் நுழைந்து அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த நகைகள் திருடப்பட்டுள்ளன. திருடப்பட்ட நகைகள் 2 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடையவை.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதே வேளை நீர்வேலி மேற்கு பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் நுழைந்து நகை, பணம் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் என 2 மில்லியன் ரூபாய்க்கும் அதிக பெறுமதியான உடமைகள், வியாழக்கிழமை (17) அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

1.34 மில்லியன் ரூபாய் பெறுமதியுடைய 34 பவுண் நகைகள், 25 ஆயிரம் ரூபாய் இலங்கை பணம் மற்றும் 8 இலட்சத்து 42 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு நாணயத் தாள்கள் என்பன இவ்வாறு கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

வீட்டிலிருந்தவர்கள் உறங்கிக் கொண்டிருந்த தருணம், வீட்டுக்குள் உள்நுழைந்து இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மேற்படி வீட்டில் தங்கியிருந்த வெளிநாட்டிலிருந்து வருகை தந்திருந்த ஒருவரின் உடமைகளே இவ்வாறு திருடப்பட்டுள்ளன.

முறைப்பாட்டின் பிரகாரம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தன
« PREV
NEXT »

No comments