பிரித்தானியாவில் இருந்து சுவிஸ் நாட்டில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபை நோக்கிய மிதிவண்டி பரப்புரைப் பயணம் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவினாலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினாலும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இந்த மிதிவண்டி பரப்புரையானது அஞ்சல் ஓட்டம் போல் அந்தந்த நாடுகளில் உள்ள செயற்பாட்டாளர்கள் இணைந்து செயல்படுத்தும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
இதில் பிரித்தானியாவில் இருந்து பரமேஸ்வரன், நீதிராஜா, திருக்குமார், துரைசாமி லோகநாதன் ஆகியோர், பிரித்தானியாவின் ஹார்விச் பகுதில் அமைந்துள்ள துறைமுகப் பகுதி வரை கடந்த இரண்டு நாட்களாக பயணம் செய்து, சிவந்தன் அவர்களிடம் அந்தப் பரப்புரையின் தொடரை கையளித்துள்ளனர்.
அதில் திருக்குமார், துரைசாமி லோகநாதன் அவர்களும் சிவந்தனுடன் தொடர்ந்தும் நெதர்லாந்து வரை பயணித்து அதன் தொடர்ச்சியை அங்குள்ள செயற்பாட்டாளர்களிடம் கையளிக்கின்றார்கள். மேலும் பிரான்ஸ், பெல்ஜியம், லக்ஸ்சம்பேர்க், ஸ்டார்ஸ்பேர்க்,சுவிஸ் என பல நாட்டு செயற்பாட்டளர்கள் இணைந்து இந்தப் பரப்புரைப் பயணத்தை முன்னெடுக்கின்றார்கள்.
கடும் மழை, குளிருக்கு மத்தியில் ஓயாது பயணம் தொடர்ந்திருந்தது, வரும் நாட்களில் மேலும் குளிர் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது அது இனி வரும் செயற்பாட்டாளர்களுக்கு சவாலாக அமையும், அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் அவர்களுக்கு உங்கள் ஆதரவினை வழங்கி அவர்களை மேலும் உத்வேகப்படுத்த வேண்டும் என வேண்டிக்கொள்கின்றனர்.
No comments
Post a Comment