Latest News

August 06, 2015

முன்னணியின் பிரச்சாரங்களை முடக்கும் முயற்சி! வழக்கை ஒத்தி வைத்த நீதிமன்றம்!!
by admin - 0

தேர்தல்விதி முறைகளைமீறினாரென சாவச்சேரி காவல்துறையினரால் தமிழ் தேசிய மக்கள் முன்னணிதலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக தாக்கல் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை தமிழ்காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளரும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தலைவருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  இன்று சாவச்சேரி நீதிமன்ற  அழைப்பாணைக்கு அமைவாக நீதிமன்றினில் ஆஜராகியிருந்தார்.

கடந்த மாதம் 31ம் திகதி சாவகச்சேரி பகுதியினில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தேர்தல் பிரச்சாரத்தினில் ஈடுபட்டடிடிருந்த வேளை அவர்களில் சிலரை காவல்துறை கைது செய்து தடுத்து வைத்திருந்ததுடன் கடுமையாக அச்சுறுத்தியுமிருந்தனர்.

அவர்கள் தேர்தல் விதி முறைகளை மீறினரென சாவச்சேரி காவல்துறையால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து கட்சி தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு நீதிமன்ற அழைப்பாணை விடுத்திருந்தது.அதேவேளை பிராச்சாரக் குழுவுடன் சென்ற யாழ்மாட்ட வேட்பாளர் திருநாவுக்கரசு சிவகுமாரனுக்கும் அழைப்பாணை அனுப்பட்டிருந்தது. அதற்கு அமைவாக இன்று  காலை  இருவரும் நீதிமன்றிக்கு சமூகமளித்தனர்.  அவ்வழக்கு  பதில் நீதவான் கணபதிப்பிள்ளையால் எதிர்வரும் ஆகஸ்ட் 29 ஆம் திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் எதிர்வரும் 17ம் திகதி நடைபெறவுள்ள நிலையினில் அரசு திட்டமிட்டு தமது பிரச்சாரங்களை குழப்பிவருவதாக முன்னணி குற்றச்சாட்டுக்களினை எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.


நன்றி பதிவு
« PREV
NEXT »

No comments