தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்றும் வேலுப்பிள்ளை பிரபாகரனே என கூட்டமைப்பின் வன்னி மாவட்டத்திலிருந்து இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் தமிழ் மக்களுக்கு விடுதலையை பெற்றுக்கொடுக்கும் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள சார்ள்ஸ் நிர்மலநாதனை வரவேற்கும் நிகழ்வொன்று கடந்த சனிக்கிழமை முல்லைத்தீவு நகரில் இடம்பெற்றது. இதன்போது அங்கு நடைபெற்ற கூட்டத்தில் அவர் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
No comments
Post a Comment