Latest News

August 25, 2015

சுவிஸ் பாராளுமன்றத்தில் தமிழ் குரல் ஓங்க வேண்டும்- ஈழத் தமிழ் வேட்பாளர் தர்சிக்கா
by Unknown - 0

சுவிஸ் நாட்டின் தேசிய பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ளது.

இத்தேர்தலில் தர்சிக்கா கிருஸ்னானந்தம் (பொருளியல் நிபுணர், தூண் நகர சொசலிச சனநாயகக் கட்சி (SP) உறுப்பினர், தூண் நகராட்சியின் பிரதிநிதி மற்றும் சமூக இணைவாக்கத்துறையின் அங்கத்தவர்) அவர்கள் 2015 ஆம் ஆண்டிற்கான நாடளுமன்றத் தேர்தலில் பேர்ண் மாநிலத்தில் சொசலிச சனநாயகக் கட்சியின் (SP) சார்பாக போட்டியிடுகிறார்.

சுவிஸ் ஈழத்தமிழரவையில் அங்கம் வகிக்கும் தர்சிக்கா கிருஸ்னானந்தம் அவர்களின் அரசியல் ரீதியான குறிக்கோள்கள், சமவாய்ப்பு - சமஉரிமை - கலாச்சார குடும்ப மற்றும் கல்வி வள ஊக்குவிப்பு - மனிதஉரிமை போன்றவையாகும்.

அத்துடன் தமிழீழ மக்களின் அவலங்களையும் நன்கறிந்து அவர்களுக்காக குரல்கொடுப்பதில் அதிக அக்கறையுடையவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மனிதநேயமுள்ள மக்களின் குரலாகவும், ஈழத்தமிழர்களின் குரலாகவும் சுவிஸ் அரசியலில் கால்பதித்துள்ள தர்சிக்கா கிருஸ்னானந்தம் அவர்களிற்கு சுவிஸ் வாழ் தமிழ்பேசும் மக்களின் ஜனநாயகக் குரலான சுவிஸ் ஈழத்தமிழரவை தனது தார்மீக ஆதரவை வழங்கும் பொருட்டு இராப்போசன நிகழ்வொன்றை நடாத்தியிருந்தது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக Margret Kiener Nellen தேசிய நாடளுமன்ற உறுப்பினர் (SP) மற்றும் சிரேஸ்ட சட்டத்தரணி, Anna Annor: சுவிஸ் ஈழத்தமிழரவையின் உபதலைவர் மற்றும் பன்மொழி மொழிபெயர்ப்பு நிபுணர், Mathuran Poopalapillai: தேசிய நாடாளுமன்ற வேட்பாளர் (Grünliberale Partei) மற்றும் பொருளியல் துறை மாணவர் Universität St. Gallen (HSG) பல்கழைக்கழகம், Sabina Stör: Interlaken மாநில நகரசபை உறுப்பினர் என பலர் கலந்து கொண்டனர்.
« PREV
NEXT »

No comments