Latest News

August 22, 2015

புதிய அரசின் ஆட்சியிலும் தமிழர்களின் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கப் போவதில்லை -இலங்கை அகதிகள்
by Unknown - 0

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேர்தலில் வெற்றி பெற்றமை தமிழ் மக்களின் நிலைகளில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தாது என தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் தெரிவித்துள்ளனர்.   

இந்தியா இராமநாதபுரம் மண்டபம் முகாமிலுள்ள இலங்கை அகதிகளே இவ்வாறு தெரிவித்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.   

அத்துடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நாடாளுமன்ற தேர்தல் தோல்வியடைந்தமையை வரவேற்றுள்ள இலங்கை அகதிகள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தமிழ் மக்களின் வாழ்க்கையில் காத்திரமான மாற்றத்தை ஏற்படுத்துவார் என்பதில் நம்பிக்கை இல்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.   

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் நிரந்தரத் தீர்வுத் திட்டத்தை வழங்கும் என எதிர்பார்க்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். 
« PREV
NEXT »

No comments