Latest News

August 20, 2015

நிதர்சனம் இணையத்தள முன்னாள் ஆசிரியர் கைது!
by admin - 0

விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ இணையத்தளமான நிதர்சனம் இணையத்தளத்தின் முன்னாள் ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளின் ஆரம்ப கால உத்தியோகபூர்வ இணையத்தளமான நிதர்சனம் இணையத்தளத்தின் ஸ்தாபக ஆசிரியரான நடராசா சேதுரூபன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

தற்போது நோர்வேயில் வசித்து வரும் இவர், சுற்றுலா வீசாவில் இலங்கை வந்து அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டமைக்காகவே கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர்கள் இலங்கையில் அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுவது தடைசெய்யப்பட்டுள்ள போதிலும் குறித்த நபர் நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக செயற்பட்டுள்ளார்.

இது பற்றிய தகவல் கிடைத்ததையடுத்து சேதுரூபனைக் கைது செய்த நெல்லியடி பொலிசார் நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.

சந்தேக நபர் இம்மாதம் 28ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

மேலும் சந்தேக நபர் குறித்த தகவல்களை பயங்கரவாத தடுப்பு பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவினர் ஆகியோருக்கும் அறிவித்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
« PREV
NEXT »

No comments