Latest News

August 07, 2015

சிலாபத்தில் isis தாக்குதல் ?
by admin - 0

சிலாபம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலொன்றில் இடம்பெற்ற வெடிப்புச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

நேற்றிரவு 7.20 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இவ்வெடிப்பில் காயமடைந்த புகையிரத திணைக்கள ஊழியரொருவர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புகையிரதத்தை சுத்திரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர் ஒருவர் பையொன்று இருப்பதைக் கண்டு அதனை திறந்து பார்த்த வேளையிலேயே இவ்வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

பிளாஸ்டிக் குழாயொன்றே இவ்வாறு வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மேலும் அப்பிளாஸ்டிக் குழாயில் ஐ.எஸ்.ஐ.எஸ் என எழுதப்பட்டிருந்த தாக தெரிவிக்கப்படுகின்றது.

பிளாஸ்டிக் குழாயினுள் வெடி மருந்து மற்றும் இரும்புக் குண்டுகளும் இருந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது யாரேனுமொரு குழுவினால் அனுப்பப்பட்ட குண்டா எனவும் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.

இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்துகொண்ட மக்கள் சந்திப்பொன்று நேற்று மாலை சிலாபத்தில் நடைபெற்றுள்ளது. மேலும் கூட்ட த்தை முடித்து விட்டு மஹிந்த ராஜபக்ஷ 7.25 மணியளவில் அங்கிருந்து சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
« PREV
NEXT »

No comments