தற்கொலை செய்து கொண்ட முன்னால் போராளியின் குடும்பத்தினருக்கு சங்கானை லயன்ஸ் கழகத்தின் மனிதாபிமான உதவி
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு இரணைப்பாலை எனும் இடத்தில் உடல் உபாதைகள் காரணமாக தற்கொலை மரணமடைந்த முன்னால் போராயின் குடும்பத்தினருக்கு (தாய், பச்சிளம் குழந்தைகள் மூவர்) சங்கானை லயன்ஸ் கழகம் இன்று 12.08.2015 பாதிக்கப்பட்ட குடும்பத்தின் வீட்டுக்கு சென்று பண உதவி செய்தனர்.
சங்கானை லயன்ஸ் கழகத்தின் உறுப்பினர் லயன்.ஜெ.அருண்குமார் அவர்கள் யேர்மனியில் வசிக்கும் சதீஸ் அவர்களால் வழங்கப்பட்ட இந்தப் பணத்தினை வழங்கி வைத்தார்.
இந்த நிகழ்வில் சர்வதேச லயன்ஸ் கழகத்தின் வலயத் தலைவர், கழகத்தின் தலைவர்கள் பலரும் பங்கு பற்றினர்.
No comments
Post a Comment