பாராளுமன்றத் தேர்தலில் இதுவரை வெளியாகியுள்ள மொத்த முடிவுகளின் அடிப்படையில் 44.92 வீத வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 45 ஆசனங்களைப் பெற்று முதலாவது இடத்திலும், 42.90 வீத வாக்குகளுடன் ஐக்கிய தேசியக் கட்சி 43 ஆசனங்களைப் பெற்று இரண்டாவது இடத்திலும் காணப்படுகின்றது.
இதேவேளை, 4.73 வீத வாக்குகளைப் பெற்று இலங்கை தமிழரசுக் கட்சி 6 ஆசனங்ளைப் பெற்றுள்ளது. 5.09 வீத வாக்குளைப் பெற்ற மக்கள் விடுதலை முன்னணி 2 ஆசனங்களை தக்கவைத்துள்ளது.
விகிதாசார ரீதியில் இதுவரை வெளியான வாக்குகளின் அடிப்படையில் மக்கள் விடுதலை முன்னணி மூன்றாவது இடத்தில் காணப்படுகின்றது. ஈ.பி.டி.பி. கட்சி இதுவரையில் ஒரு ஆசனத்தைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment