Latest News

August 18, 2015

சகலருக்கும் சம அந்தஸ்துடன் கூடிய புதிய நாடு-ரணில் விக்ரமசிங்க
by Unknown - 0

சகலருக்கும் சம அந்தஸ்துடன் கூடிய புதிய நாட்டை உருவாக்குவோம் என ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், ஜனவரி 8ஆம் தேதி ஏற்படுத்திய புரட்சியையும் இணக்கப்பாட்டினையும் முன்னெடுத்துச் செல்வதற்கு நாட்டின் பெருந்தொகையான மக்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

மேலும், "தற்போது வெற்றியாளர்கள், தோல்வியடைந்தவர்கள் என பிரித்துப் பார்த்தலாகாது. புதிய யுகத்தின் சவால்களுக்கு முகம் கொடுத்து எங்கள் தேசத்தை முன்னேற்றுவதற்கு ஒரு மனதுடன் ஒத்துழைக்க வேண்டியுள்ளது" என ரணில் கூறியுள்ளார்.

அனைவரும் ஒன்றிணைந்து நாகரீகமான சமூகமொன்றை உருவாக்குவோம் என்றும் இணக்கப்பாட்டுடன் கூடிய ஓர் அரசாங்கத்தை உருவாக்குவோம் என்றும் ரணில் தன் அறிக்கையில் கூறியுள்ளார்.
« PREV
NEXT »

No comments