ஏஷஸ் டெஸ்ட் கிரிக்கட் போட்டிகளின் பின்னர் ஓய்வு பெற போவதாக அவுஸ்திரேலிய அணியின் தலைவர் மைக்கல் கிளார்க் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான நான்காவது ஏஷஸ் கிண்ண கிரிக்கட் போட்டி நிறைடைந்ததன் பின்னரே அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
ஏஷஸ் தொடரில் இதுவரை இடம் பெற்றுள்ள நான்கு போட்டிகளில் இங்கிலாந்து அணி 3க்கு 1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
இந்தநிலையில், எதிர்வரும் 20 ஆம் திகதி ஓவலில் இடம் பெறவுள்ள ஐந்தாவது ஏஷஸ் டெஸ்ட் போட்டியுடன் ஒய்வு பெற தீர்மானித்துள்ளதாக மைக்கல் கிளார்க் குறிப்பிட்டுள்ளார்.
No comments
Post a Comment