ஈழத்தமிழரும், இலங்கை தேர்தலும். - மே பதினேழு இயக்கம்-காணொளி.
இலங்கை ராணுவத்தினரை சர்வதேசம் விசாரிப்பதை நாங்கள் ஒருபொழுதும் அனுமதியோம் என்று ரணில் தெளிவாக சொல்லிய பிறகு,
உள்நாட்டு விசாரணை முறையை ஏற்றுக்கொள்ளவேண்டுமென்று ஐ.நா அதிகாரி எனும் போர்வையில் அமெரிக்கா மிரட்டிய பின்னர்,
தனது பதவிகளை மேற்குலகம் தனது சுயநலத்திற்காக பயன்படுத்திக் கொள்வதை ஐ.நாவின் தலைமைச் செயலகம் அனுமதித்த பின்னர்,
இலங்கையோடு ராணுவ-வர்த்தக ஒப்பந்தங்களை இந்தியா ஏற்படுத்திக்கொண்ட பின்னர்,
ஈழத்தமிழ் குடிமக்கள் எவ்விதம் இந்த தேர்தலை எதிர்கொள்ள இயலும் என்பதை தீவிரவிவாதத்திற்கு உட்படுத்தும் காலகட்டம் இது.
மே 17 இயக்கம் இந்த தேர்தலை எவ்விதம் அணுகுகிறது என்பதை குறைந்த பட்ச அளவில் முன்வைக்கிறோம். நேர்மையான அரசியல் தலைமைகளை முன்னெடுக்கும் பொறுப்பு ஈழத்தமிழ் இளைஞர்களுக்கும், மாணவர்களுக்கும் இருக்கிறது என்பதை உறுதியாக நம்புகிறோம்.
இந்தியாவாலும் , மேற்குலகத்தாலும் ஆளப்படுகிற தமிழர்களின் பிரதான கூட்டமைப்பினை கடந்து புதிய குரல்களை அடையாளம் காண்பதும், சமரசமற்ற முழக்கங்களை முன்னெடுப்பதும், தேர்தல் கடந்த வலிமையான மக்கள் இயக்கங்களை உருவாக்கும் வலிமை கொண்ட ஈழத்தமிழ் இளைஞர்களையும், மாணவர்களையும் களத்திற்கு அழைக்கிறோம்.
இலங்கையின் அரசியல் சாசனத்தை புறக்கணித்துவிட்டு, மக்கள் திரள் அரசியலை மேற்கொண்டு அரசுகளை வெல்வோம். உங்களுடன் எப்பொழுதும் தமிழகத்தின் முற்போக்கு தோழர்கள் கரம் கோப்பார்கள். பெரும் மக்கள் திரள் போராட்டங்களைக் கொண்டு வென்றெடுப்போம் தமிழீழ விடுதலையை.
மே17 இயக்கம்.
No comments
Post a Comment