கிளிநொச்சி கரடிபோக்கிற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த ஸ்ரீலங்கா இராணுவத்தினரை பின்னால் சென்ற கஜஸ் ரக வாகனம் ஒன்று மோதி இராணுவத்தினாரை துாக்கி எறிந்த சம்பவம் இன்று(13-08-2015) காலை நடந்துள்ளது.
கிளிநொச்சி பிரதேசத்தில் நடைபெற்ற விபத்தில் அதிக விபத்து நடை பெறுகின்ற இடமாக கிளிநொச்சி டிப்போச்சந்திக்கும் பரந்தன் சந்திக்கும் இடையில் தான்.
இந்த விபத்து மற்றும் நேற்றய தினம் நடந்த லொறி மோட்டார் சைக்கிள் விபத்து என்பன குறிப்பிட்ட இவ் இடங்களிலே நடந்தது அத்துடன் அபிவிருத்தியின் காரணமாக கிளி நொச்சி பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இருவழி புதிய பாதைகள் அமைக்கப்பட்ட பின்னர் இவ் பிரதேசத்தில் விபத்துக்கள் அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.
அபிவிருத்தியின் காரணமாகவே இவ்வாறான விபத்துக்கள் வருகின்றன என்று குறிப்பிட வில்லை முழுதும் சாரதிகளின் கவனயீனம் மட்டுமே ஆகும்
No comments
Post a Comment