இலங்கையின் இனப்பிரச்சனை தீர்வுக்கு, இந்தியா முன்னுரிமை வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், சுரேஷ் பிரேமசந்திரன், யாழ்ப்பாணத்தில் இன்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த கோரிக்கையினை விடுத்தார்.
இந்தியாவினால் கொண்டு வரப்பட்ட 13வது அரசியல் அமைப்பு திருத்தம், தமிழ் மக்களின் பிரச்சனைகளை தீர்க்காது என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் கருத்தாக இருக்கிறது.
இலங்கை இரண்டுபடக்கூடாது என்பது இந்தியாவின் நோக்கமாக இருக்கலாம்.
ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் அபிலாசைகள் தீர்க்கப்படாத போது, இலங்கையில் பிரச்சனைகள் தொடர்வதை தவிர்க்க முடியாது என்றும் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
No comments
Post a Comment