Latest News

July 01, 2015

மஹிந்த கூட்டணியே அடுத்த நாட்டை ஆளும் - வாசு
by admin - 0

எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின் மஹிந்த ராஜபக்ஷவை தலைமையாகக் கொண்ட அரசாங்கம் அமையும் என முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 

நாராஹென்பிட்டி அபயாராம விகாரையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு தெரிவித்தார். 

மஹிந்தவை பிரதமராக்க தம்மால் முடிந்த அனைத்தையும் செய்யவுள்ளதாக அவர் குறிப்பிட்டார். 

கோட்டாபய ராஜபக்ஷவின் அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஒக்டோபர் 8ம் திகதிவரை பிற்போடப்பட்டமை தொடர்பில் தனக்கும் குழப்பம் உள்ளதென வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 
« PREV
NEXT »

No comments