Latest News

July 31, 2015

கொட்டாஞ்சேனையில் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர் மீது துப்பாக்கி சூடு! பெண் பலி! 11 பேர் காயம்
by admin - 0

கொழும்பு -13,  கொட்டாஞ்சேனை, புளுமெண்டல் பகுதியில் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது
இதன்போது ஒரு பெண் ஒருவர் பலியானார். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

இந்த சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை பகல் இடம்பெற்றுள்ளது.

இரண்டு வாகனங்களில் வந்தோரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் ரவி கருணாநாயக்க, கலந்து கொள்ளவிருந்த கூட்டம் ஒன்றின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றது.

சம்பவத்தின் போது ரவி கருணாநாயக்க அங்கு சமுகம் தரவில்லை.
இந்தநிலையில் பாதாள உலக குழுக்களுக்கு இடையிலான முறுகலே இந்த சம்பவத்துக்கான காரணம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பில் துப்பாக்கி பிரயோகம்! பெண்ணொருவர் பலி

கொழும்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் பிரசாரப் பணிகளில் ஈடுபட்டவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று கொழும்பு புளுமெண்டால் வீதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் 9 பேர் காயமடைந்துள்ளதாக காவற்துறை தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சம்பவம் குறித்து விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

ரவி ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம்; 11 பேர் காயம்! பெண் பலி

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது கொட்டஹேன, புளுமென்டல் வீதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த குறித்த ஆதரவாளர்கள் மீது இரண்டு வாகனங்களில் வந்த குழுவினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

துப்பாக்கி சூட்டில் காயமடைந்த 12 பேர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

எனினும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தேசிய வைத்தியசாலை மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளதாகவும், அவர்களுக்கு அவசர மருத்துவ சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.


« PREV
NEXT »

No comments