Latest News

June 23, 2015

“அரும்புகளின்” இருபதாவது இலவசக்கல்வியகம் மாத்தளன் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ...
by admin - 0

“அரும்புகளின்” இருபதாவது இலவசக்கல்வியகம் மாத்தளன் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ......

உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தின் கல்வி வளர்சித்திட்டப்பிரிவான “அரும்புகள்” போரினால் பாதிக்கப்பட்டு முழுமையாக சிதைக்கப்பட்ட கிராமங்களில் மாலை நேர கல்வி செயற்பாடுகளை இலவசமாக முன்னெடுத்து வருகின்றமை நாம் அறிந்ததே. 

அந்த வகையில், 2009 யுத்தத்தின் போது மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான முல்லைத்தீவு மாவட்டத்தின் மாத்தளன் கிராமத்தில்தனது கல்வி உதவி திட்டங்களை ஆரம்பித்துள்ளது

பொக்கனை மகாவித்தியாலயம், மாத்தளன் றோமன் கத்தோலிக்கப்பாடசாலை ஆகிய இரண்டு பாடசாலைகளையும் ஒன்றினைத்து 50 மாணவர்களுக்கான மாலை நேர வகுப்புக்களை ஆரம்பித்துள்ளது.

மாத்தளன் றோமன் கத்தோலிக்கப்பாடசாலை அதிபர் தலைமையில் 21.06.2015 அன்று நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். ஆசிரியர்கள் , மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்ட நிகழ்வில் ரவிகரன் அவர்கள் “அரும்புகளின்” சேவை குறித்து சிறப்புரையாற்றினார். தமிழ் மாணவ சமுதாயத்தின் கல்வி வளர்சிக்காக “அரும்புகள்” தனது கல்வி உதவி திட்டங்களை இன்னும் பல கிராமங்களுக்கு விஸ்தரிக்க வேண்டும் என்ற கோரிக்கையினையும் “அரும்புகள்” நிர்வாகத்திடம் முன்வைத்துபேசினார்.

மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களும் “அரும்புகளால்” வழங்கப்பட்டன. மாணவர்களின் பெற்றோர்கள், “ அரும்புகளுக்கும்” அரும்புகள் சார்பாக புலம் பெயர்ந்த தேசத்திலிருந்து உதவும் உன்னத உறவுகளுக்கும் நன்றிகளை தெரிவித்தனர். 

“வாழ்வில் மேலாம் கல்விதனை 

கற்றே நாமும் உயர்ந்திடுவோம்”

“அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்”

முதன்மைசெயலகம்,
உலகத்தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம்
« PREV
NEXT »

No comments