ஶ்ரீலங்கா அரசினை அனைத்துலக நீதிமன்றில் பாரப்படுத்துமாறு ஐ.நாவைக் கோரும் கையெழுத்து இயக்கத்தினை தீவிரப்படுத்தும் பொருட்டு லண்டன் ஈஸ்தாம் பகுதியில் அணைத்து மக்களும் கலந்துகொண்ட பொதுக்கூட்டமொன்று நடைபெற்றது இதில் மெருமளவான மக்களும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒழுங்குபடுத்திய் இக்கூட்டதில் ஶ்ரீலங்கா அரசின் இனப்படுகொலையை உலக அரங்கில் எடுத்துரைத்து தமிழீழ மக்களுக்கு நீதியை பெற்றுக்கொள்ளும் ஒரு அங்கமாக பத்து லட்சம் கையெழுத்துக்களை இலக்காக கொண்டுள்ள கையெழுத்து இயக்கம் தொடர்பிலும் மற்றம் நடந்து முடிந்த நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைக் கூட்டம் தொடர்பிலும் கருத்துப்பரிமாறப்பட்டது.
இதில் மக்களும் நாடுகடத்த தமிழீழ அரசின் அமைச்சர்கள் , பாரளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் அமைப்பு பிரதிநிதிகளும் தங்கள் கருத்துக்களை தெரிவித்ததுடன் எப்படி ஶ்ரீலங்கா இனப்படுகொலை அரசை சர்வதேச நீதிமன்றில் நிறுத்தி தமிழ் மக்களுக்கான நீதியை பெற்றுக்கொள்ளலாம் அதற்காக தமிழ் மக்கள் உலகமக்களுடன் இணைந்து எப்படி செயற்படலாம் என்ற மக்கள் கலந்துரையாடலாக இந்நிகழ்வு இடம்பெற்றது.
No comments
Post a Comment