கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது கண்டி, ஜனாதிபதி மாளிகையில் 5000 ரூபா நாணயத் தாள்கள் நிரப்பப் பட்ட 100 பெட்டிகள் கைவிடப்பட்ட நிலையில் இருந்ததாக தகவல் வெளியிட்டுள்ளார் அமைச்சர் லக்ஷ்மன் கிரியல்ல.
ஸ்ரீலசுகட்சி உறுப்பினர் ஒருவரே தமக்கு இந்தத் தகவலை தந்திருந்ததாகவும் அவரிடம் விளையாட்டாக அதில் நீங்கள் எதுவும் எடுக்கவில்லையா என கேட்டபோது சிசிடிவி இருப்பதால் பயமாக இருக்கிறது என அவர் தெரிவித்ததாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். இப்படியிருந்தும் அன்று தேர்தலை வெல்ல முடியாது போன மஹிந்தவால் இனிமேல் வெல்ல முடியாது எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment