புங்குடுதீவில் மாணவி படுகொலையை கண்டித்து வடமாகாணத்தில் பரவலாக போராட்டம் இடம்பெற்றுள்ளது.
கூட்டு வன்புணர்வின் பின் மாணவி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இன்று யாழ். பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் மாணவர் ஒன்றியமும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தியுள்ளன.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெருமளவான மாணவர்களும் விரிவுரையாளர்களும் கலந்து கொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
இதேவேளை,
இன்று கிளிநொச்சி சென். திரேசா மகளிர் கல்லூரி மாணவிகளும் புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தினர்.
மாணவி படுகொலைக்கு நீதி கிடைக்க வலியுறுத்தியும் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தியும் இந்த பேரணி நடத்தப்பட்டது.
பொலிஸ் அதிகாரமே பொறுப்போடு நடந்து கொள்!
நீதியை நிதிக்காக விற்காதே!,
போன்ற பதாதைகளை தாங்கியவாறு மாணவிகள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments
Post a Comment