Latest News

May 09, 2015

தற்போதைய முறைப்படியே தேர்தல் நடத்த வேண்டும் தேர்தல்முறை மாற்றம் தொடர்பில் அவசர தீர்மானத்தை எடுப்பதில்லை;சிறுபான்மை, சிறிய கட்சி தலைவர்கள் இணக்கப்பாடு
by admin - 0

விவசாயி, தமிழ் செய்திகள், ஈழம் செய்திகள், யாழ்ப்பாண  செய்திகள், இந்தியசெய்திகள், கவிதைகள், விடுப்பு, பல்கலைக்கழகம், விடுதலை, கடல், தரை, இலங்கை, வவுனியா, கிளிநொச்சி, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, முல்லைதீவு, TGTE, Transnational Government of Tamil Eelam, Tamilnews, tamilwin, athirvu, newjaffna, jaffna,vivasaayi, kavinthan, tamilwin,lankasri, jaffna, kilinochchi, vavuniya, TGTE,TGTE-WCE,WCE-TGTE,TGTE-HOMELAND.ORG, transnational government of tamil eelam,www.lankasri.com
தேர்­தல்­முறை மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டாலும் எதிர்­வரும் பொதுத் தேர்தல் பழைய முறையின் படியே நடத்­தப்­ப­ட­வேண்­டு­மென்றும் தேர்­தல்­முறை மாற்றம் தொடர்பில் அவ­சர தீர்­மா­னத்தை எடுக்­காது ஜனா­தி­ப­தியால் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்கும் பிர­தான இரு தேர்தல் திருத்த யோச­னைகள் தொடர்பில் கலந்­து­ரை­யாடி இணக்­கப்­பாட்­டிற்கு வரு­வ­தெ­னவும் சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சி­களின் பிர­தி­நி­திகள் தீர்­மா­னித்­துள்­ளனர்.

வெகுவிரைவில் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரின் ஆலோ­ச­னைகளு
க்­க­மைய தேர்­தல்­முறை மாற்றம் தொடர்பில் இறுதி முடிவை எட்­டு­வது எனவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

தேர்­தல்­முறை மாற்றம் தொடர்பில் சிறு­பான்மை கட்­சிகள் மற்றும் சிறிய கட்­சிகள் ஆகி­ய­வற்றின் தலை­வர்கள் நேற்று பத்­த­ர­முல்ல வோட்டர்ஸ் ஏஜ் ஹோட்­டலில் முக்­கிய கலந்­து­ரை­யா­ட­லொன்றை நடத்­தினர். இதன்­போது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, ஸ்ரீலங்கா முஸ்­லிம் ­காங்­கிரஸ்,
மக்கள் விடு­தலை முன்­னணி, ஜன­நா­யக மக்கள் முன்­னணி, இலங்கை தொழி­லாளர் காங்­கிரஸ், ஈழ­மக்கள் ஜன­நா­யக கட்சி,....... உள்­ளிட்ட சிறிய மற்றும் சிறு­பான்மை கட்­சி­களின் தலை­வர்கள் பங்­கேற்­றி­ருந்­தனர்.

சுமார் ௩ மணி நேரத்­திற்கும் அதி­க­மாக இக்­க­லந்­து­ரை­யாடல் இடம்­பெற்­றி­ருந்த நிலையில் பிர­தான மூன்று முக்­கிய விட­யங்கள் தொடர்பில் இக்­க­லந்­து­ரை­யா­டலில் இணக்கம் காணப்­பட்­டது.
குறிப்­பாக தேர்தல் முறை­மை­மாற்றம் தொடர்பில் உட­னடித் தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வேண்­டு­மென்று பிர­தான கட்­சிகள் அழுத்தம் கொடுத்­து­வரும் நிலையில் உட­னடித் தீர்­மா­ன­மொன்­றுக்கு வரு­வ­தில்லை எனவும், கொண்­டு­வ­ரப்­படும் தேர்­தல்­முறை மாற்­ற­மா­னது நடக்­க­வி­ருக்கும் பொதுத் தேர்­தலில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டக்­கூ­டா­தெ­னவும் ஜனா­தி­ப­தியால் முன்­வைக்­கப்­பட்­டி­ருக்கும் பிர­தான இரு தேர்தல் திருத்த யோச­னைகள் தொடர்பில் சகல சிறு­பான்மை மற்றும் சிறிய கட்­சிகள் கலந்­து­ரை­யாடி அதற்­க­மைய இணக்­கப்­ப­டொன்றை எட்­டு­வ­தென்ற மூன்று இணக்கம் எட்­டப்­பட்­டுள்­ளது.

இது­தொ­டர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் அமைச்­ச­ரு­மான ரவூப் ஹக்கீம் கருத்து தெரி­விக்­கையில்
தற்­பொ­ழுது முன்­வைக்­கப்­பட்­டி­ருக்கும் தேர்தல் முறை­மை­மாற்றம் முக்­கி­ய­மாக சகல சமூ­கத்­திற்­கி­டை­யிலும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­ய­தொன்று. இவ்­வா­றா­ன­தொரு திருத்தம் உட­ன­டி­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்­பது சாத்­தி­ய­மற்­ற­தா­கவே கரு­த­வேண்­டி­யுள்­ளது.

ஏனெனில் சிறு­பான்மை கட்­சிகள் மற்றும் சிறிய கட்­சி­க­ளுக்­கி­டையில் இணக்­கப்­பா­டொன்று எட்­டப்­ப­டாத நிலையில் பெரிய கட்­சி­களின் தேவை­க­ளுக்­காக நாம் செயற்­ப­டு­வோ­மாயின் இறு­தியில் இதன்­தாக்கம் சிறு­பான்மை மக்­க­ளையே சென்­ற­டையும். இத­ன­டிப்­ப­டையில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தாயின் 20 ஆவது திருத்தச் சட்டம் நிறை­வேற்­றப்­பட வேண்­டு­மென தெரி­வித்­துள்ளார்.

அமைச்­ச­ரவைக் கூட்­டத்­திலும் இரண்டு பிர­தான யோச­னைகள் முன்­வைக்­கப்­பட்­டுள்­ளன. இவை தொடர்பில் ஆராய்ந்­து­பார்க்­காது எம்மால் உட­னடித் தீர்­மா­னத்தை எட்­ட­மு­டி­யாது. ஆகவே சிறு­பான்மை, சிறிய கட்­சி­க­ளுக்­கி­டையில் இணக்­கப்­ப­டொன்றை எட்­டு­வதன் மூலம் நமது இருப்­பினை தக்­க­வைத்துக் கொள்ள முடியும் என சுட்­டிக்­காட்­டினார்.
கலந்­து­ரை­யா­டலில் கருத்துத் தெரி­வித்த மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனுர குமார திஸா­நா­யக்க தெரி­விக்­கையில்
பாரா­ளு­மன்­றத்தை கலைப்­ப­தையும் 20 ஆவது திருத்தச் சட்­டத்தை நிறை­வேற்­று­வ­தையும் ஒன்­றாக்கி தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்தும் முன்­னெ­டுத்துச் செல்லும் திட்­டத்­தி­லேயே தற்­போ­தைய அர­சாங்கம் செயற்­பட்­டு­வ­ரு­கின்­றது.
தேசிய அர­சாங்­கத்தின் மூலம் 19 ஆவது திருத்தச் சட்­டத்­தினை நிறை­வேற்­று­வ­தென்­பது பொது­வான இணக்­கப்­பாடு. அந்த வகையில் அதி­கா­ரப்­ப­கிர்­வினை செய்­து­விட்டோம். ஆயினும் தேர்­தல்­மு­றைமை மாற்றம் என்­பது தேசிய அர­சாங்­கத்­துடன் தொடர்­பு­ப­டா­ததும் அனைத்துக் கட்­சி­க­ளுக்­கி­டை­யிலும் தாக்­கத்­தினை ஏற்­ப­டுத்­துமோர் திருத்­த­மாகும். ஆகவே தேர்­தல்­மு­றைமை மாற்றம் தொடர்பில் கொண்­டு­வ­ரப்­படும் மாற்­றத்­தினை ஆரா­யாது ஆத­ர­வ­ளிக்­க­மு­டி­யாது. அதேபோல் பாரா­ளு­மன்றம் இன்று பல­மற்­ற­தொரு நிலை­யி­லேயே செயற்­ப­டு­கின்­றது. ஆளும், எதிர்க்­கட்­சிகள் யார் என்­பது தெரி­ய­வில்லை. அத்­தோடு மக்­களின் ஆத­ர­வில்­லாத ஒருவர் இன்று அர­சாங்­கத்தை நடத்­து­கின்றார்.
இவ்­வா­றா­ன­தொரு நிலையில் நிலை­யான பாரா­ளு­மன்­றத்­தினை அமைப்­ப­தோடு உறு­தி­யான அர­சாங்­கத்­தி­னையும் பல­மான எதிர்க்­கட்­சி­யி­னையும் உரு­வாக்­க­வேண்டும். அதன் பின்­னரே தேர்தல் முறை­மையில் மாற்றம் தொடர்பில் சிந்­திக்க முடியும் . மேலும் 20 ஆவது திருத்தச் சட்டம் கொண்­டு­வ­ரப்­ப­ட­வேண்­டு­மென்ற கட்­டா­யத்தில் அனை­வரும் உள்ளோம். எனினும் இன்னும் 20 ஆவது திருத்தச் சட்­டத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டு­மாயின் அதன் பின்னர் நடத்­தப்­ப­ட­வேண்­டிய தேர்­த­லுக்கு ஒரு வரு­டத்­திற்கு மேற்­பட்ட கால­அ­வ­ச­காசம் தேவை. 

அவ­ச­ர­மாக தேர்­தல்­மு­றை­மையில் மாற்­றத்­தி­னைக்­கொண்­டு­வந்து உட­ன­டி­யாக தேர்­தலை நடத்­து­வது. மக்­க­ளி­டையே குழப்­பத்தை ஏற்­ப­டுத்தும். ஆகவே தேர்­தல்­மு­றை­மையில் மாற்றம் கொண்­டு­வ­ரு­வது தொடர்பில் தீர்­மா­னங்கள் எடுக்­கப்­பட்­டாலும் இம்­முறை நடை­பெறும் தேர்தல் தற்­போது இருக்கும் முறை­யி­லேயே நடத்­தப்­பட வேண்டும்.


மேலும் தற்­போது முன்­வைக்­கப்­பட்­டி­ருக்கும் ஜனா­தி­ப­தியின் பிர­தான இரு திருத்­தங்கள் தொடர்பில் அனைத்து கட்சிகளும் கவனம் செலுத்தி அத்திருத்தங்களில் எது சிறந்தது என்பதில் இனங்காண்பதோடு சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகளுக்குகிடையில் நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் மாற்றங்களைக் கொண்டுவந்து அதற்கமைய இணக்கப்பாடொன்றை எட்டப்படவேண்டும் என தெரிவித்தார்.


இந்நிலையில் கலந்துரையாடலில் கலந்துகொண்டிருந்த தமிழ், சிங்கள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளுக்கிடையில் இவ்விடயங்கள் தொடர்பில் பொதுவான இணக்கப்பாடொன்று எட்டப்பட்டதோடு எதிர்வரும் காலங்களில் இவ்விடயங்கள் தொடர்பில் கூடிய கவனமெடுத்து ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்து இறுதி முடிவெடுப்பதென்று தீர்மானிக்கப்பட்டது.
« PREV
NEXT »

No comments