Latest News

May 26, 2015

போர்க் களத்தில் ஒர் பூ திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது!
by Unknown - 0

போர்க் களத்தில் ஓர் பூ என்ற திரைப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்திய மத்திய திரைப்படச் சான்றிதழ் நிலையத்தினால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் நிஜ வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இலங்கை அரச படையினரால் இசைப்பிரியா கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த திரைப்படம் காட்சிப்படுத்தப்பட்டால் நட்பு நாடுகளுடனான உறவுகளை பாதிக்கும் என வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த திரைப்படம் தடை செய்யப்பட்டமைக்கான உத்தியோகபூர்வ கடிதம் தமக்கு கிடைக்கவில்லை என திரைப்பட இயக்குனர் கே.கணேசன் தெரிவித்துள்ளார். மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விமர்சனம் செய்வதில் நட்பு நாடுடன் பகைமை ஏற்பட வாய்ப்பு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிராக தமிழக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இதேவேளை, சட்ட திட்டங்களுக்கு அமைவான வகையில் இந்த திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு உள்ளதாக இந்திய மத்திய திரைப்படச் சான்றிதழ் நிலையத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வீ.சேகர் தெரிவித்துள்ளார்.

« PREV
NEXT »

No comments