அசாதாரண சூழ்நிலையில் சமாதானத்தை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ள முடியும் என்று வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் ஏ. ஜயசிங்க தெரிவித்தார். வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும் யாழ். மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இன்று யாழ்ப்பாணம் பொலிஸ் தலைமையகத்தில் இடம்பெற்றது. அதன்போது, கடந்த 19 ஆம் திகதி புங்குடுதீவு மக்களுடைய கோரிக்கைக்கு அமைய வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபரால் 20 ஆம் திகதி நேற்றைய தினம் 12 மணிக்கு கொழும்பில் கைது செய்யப்பட்ட சசிகுமார் என்பவரையும் அவரை தப்பிக்க வைத்தார் என மக்களால் குற்றஞ்சாட்டப்பட்ட சட்ட விரிவுரையாளரையும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவது என எழுத்து மூலம் உறுதியளித்திருந்தார். எனவே குறிப்பிட்ட விரிவுரையாளர் ஆஜர்ப்படுத்தப்படுவாரா ? அவ்வாறு இல்லை எனின் ஏன் வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர் குறித்த விடயத்தை எழுத்து மூலம் அறிவித்தார் என ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஒருவர் தவறு செய்தார் என்றால் சாட்சிகள் இருக்க வேண்டும் அவ்வாறு இருந்தால் மட்டுமே எங்களால் கைது செய்ய முடியும்.
No comments
Post a Comment