Latest News

May 24, 2015

மீண்டும் கறுப்பு ஜூலை உருவாக்க மகிந்த திட்டம்
by admin - 1

கறுப்ப ஜூலை

எதிர்வரும் ஜூலை மாதத்தில் சிங்கள, தமிழ் மக்கள் இடையே மீண்டும் இனக்கலவரத்தினால் இரத்தம் தோய்ந்த மோதல் ஒன்றை ஏற்படுத்த ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மகிந்த ராஜபக்ச தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
அதற்காக ஜுலை மாதத்தை தெரிவு செய்ததற்கு காரணம் இலங்கை இனப்பிரச்சினையை உக்கிரமடையச் செய்த தமிழர் வரலாற்றில் வடுவாக கறுப்பு ஜூலை காணப்படுகிறது. 
ஜூலை மாதத்தில் ஏதோ ஒரு வகையில் மோதல் நிலையொன்றை ஏற்படுத்திவிட்டால் உலகம் முழுவதும் வாழும் தமிழர்களை கோபமடைய செய்ய முடியும் என்பதால் மகிந்த தரப்பினர் இம் மாதத்தை தெரிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
இத்திட்டத்தின் முதற்கட்டம் சமீபத்தில் யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர்ந்த நிகழ்வைக்கூட, யாழ்ப்பாணத்தில் புலிக்கொடி பறக்கவிடப்பட்டுள்ளதாக மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தார். 
அத்துடன், யாழ் நீதிமன்றில் பொதுமக்களை கலவரத்தில் ஈடுபடுத்துவதிலும் இத்தரப்பினர் பின்நின்று செயற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 
அரசாங்கத்தினால் யுத்த வெற்றியினை நினைவு கூறுவதற்கு ஆயத்தமான சந்தர்ப்பத்தில் யாழ்ப்பாண பாடசாலை மாணவியின் கொலை வழக்கின் சந்தேக நபரை வெளியிட்டு பொது மக்களிடையே ஆத்திரத்தை உண்டு பண்ணும் நோக்கத்திலும் செயற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
இதேவேளை நாட்டில் இதற்கு முன்னர் இவ்வாறான போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன எனினும் இந்தச் சம்பவத்தினை இனவாத ரீதியாக செயற்பாடென பிரச்சாரத்தை பரப்புவதற்கு சமூக வலைத்தளங்களை அவர்கள் தற்போது மிகப்பெரியளவில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். 
மகிந்த தரப்புக்கு ஆதரவான நாடாளுமன்ற உறுப்பினர்கள் முகப்புத்தகம் போன்றவையினாலும் பிரசாரங்களை மேற்கொண்டுள்ளதோடு ஊடகப் பிரிவுகளை ஸ்தாபித்து இந்தப் பிரசாரப் பணிகளை ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது. 
ராஜபக்சவிற்கு நெருக்கமான புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளும், பொலிஸ் பிரிவின் உயர் அதிகாரிகள் சிலரும் இந்தத் திட்டத்தில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
இதேவேளை, சில கட்டங்களாக முன்னெடுக்கப்படவுள்ள கறுப்பு ஜூலைத் திட்டத்தின் அடுத்த சில திட்டங்கள் எதிர்வரும் சில வாரங்களில் நடைமுறைப்படுத்துவதற்கு குறித்த தரப்பினர் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
பிரதமர் பதவி கவனவை நனவாக்குவதற்கு இலகுவான முறையில் மக்களிடத்தில் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கு ஆயுதமாக இனவாதத்தைத் தூண்டி விடுவதற்கே மகிந்த தரப்பினர் தற்போது திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 
மேலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் கருத்துக்களின் மூலம் இத்திட்டங்கள் தெளிவாக நிரூபமாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
« PREV
NEXT »

1 comment

Unknown said...

இதை தடுப்பதற்கான அல்லது இதன் தீவிரதன்மையை குறைப்பதற்கான வழி யார் இந்த இன பிரச்சினைக்கு தூண்டுதலாக அமைகிறார்களோ அவர்களை மட்டு சிட்டிகாட்டி எதிர்ப்பை வெலிப்படுத்துவது. மாறாக ஒரு இனத்தை சுட்டிக்காட்டி எதிர்ப்பை வெலிப்படுத்தினால் பிரச்சினை தீவிரமடைய அதிக வாய்ப்புக்கள் உள்ளது.
தமிழர்கள் பொதுவாக சிங்களவர்கள் என மொத்த இனத்தையும் சுட்டிகாட்டிதான் பேசுவதை வழக்கமாக கானப்படுகிறது.
இதை மாற்றி யார் காரனம் என்பதை நாம் விழங்கி மக்களுக்கு சொல்லி அவர்களை மட்டும் நாம் எதிர்க்க வேண்டும்.
அப்போதுதான் நமது இலக்கு செரியாக இருக்கும்.

2012 ம் ஆண்டு இலங்கை மற்றும் மியன்மாரிலும் சில பௌத்த அமைப்புக்களால் முஸ்லிம்களுக்கு எதிராக பாரிய இனப்பிரச்சினை உருவாக்க திட்டமிட்டனர். அது மியன்மாரில் மட்டுமே அவர்களால் செய்ய முடிந்தது ஆனால் இலங்கையில் முடியவில்லை. 2013 இலும் அப்படித்தான் 2014இல் பாரிய கலவரத்தை ஆரம்பிக்க திட்டமிட்டனர் ஆனால் அது அளுத்கமவுடன் நின்று விட்டது. ஆனால் மியன்மாரில் அது இன்றும் தொடர்கிறது.

இலங்கையில் அவர்களால் பாரிய அளவில் ஒன்றும் செய்ய முடியாததற்கு காரனம் முஸ்லிம்கள் நம்மை யார் எதிர்க்கிறார்கள் எண்டு விழங்கி அவர்களுக்கு எதிராக மட்டும் செயற்பட்டமைதான்.

தமிழர்களும் தம்மை யார் எதிர்கிறார்கள் என்பத விழங்கி செயற்பட்டால் வற இருக்கின்ற பிரச்சினையை தடுக்கலாம் அல்லது குறைக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம் இல்லை என்றால் விளைவு விவரீதமாகி விடும்.