குடாநாட்டில் சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் உட்பட சகல காய்கறி வகைகளின் விலையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் உற்பத்தியாளர்களுக்கு திண்டாட்டம் பாவனையாளர்களுக்கு கொண்டாட்டம்.
குடாநாட்டில் பருவ மழையும் காலபோக நெற்செய்கையும் முடிவடைந்ததையடுத்து வயல் நிலங்களிலும் மேட்டு நிலங்களிலும் மரக்கறி வகைகள் உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து 200 ரூபாவிலிருந்து 300 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வந்த கத்தரி, பயிற்றை, வெண்டி, தக்காளி, கோவா போன்ற மரக்கறி வகைகள் தற்போது 30 ரூபாவிலிருந்து 50 ரூபா வரை விற்பனையாகின்றன.
இதேவேளை, சின்ன வெங்காயம் அறுவடையும் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து ஒரு கிலோ 50 ரூபாவிலிருந்து 80 ரூபா வரை விற்பனையாகிறது. பச்சை மிளகாயும் 15 ரூபாவிலிருந்து 20 ரூபா வரை விற்பனையாகிறது. மரக்கறி வகைகளின் விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் உற்பத்தி செலவும் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதேவேளை வியாபாரிகள் கூடுதலான நன்மை அடைந்து வருகிறார்கள்
இதனால் உற்பத்தியாளர்களுக்கு திண்டாட்டம் பாவனையாளர்களுக்கு கொண்டாட்டம்.
குடாநாட்டில் பருவ மழையும் காலபோக நெற்செய்கையும் முடிவடைந்ததையடுத்து வயல் நிலங்களிலும் மேட்டு நிலங்களிலும் மரக்கறி வகைகள் உற்பத்தி செய்வதில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து 200 ரூபாவிலிருந்து 300 ரூபா வரை விற்பனை செய்யப்பட்டு வந்த கத்தரி, பயிற்றை, வெண்டி, தக்காளி, கோவா போன்ற மரக்கறி வகைகள் தற்போது 30 ரூபாவிலிருந்து 50 ரூபா வரை விற்பனையாகின்றன.
இதேவேளை, சின்ன வெங்காயம் அறுவடையும் ஆரம்பிக்கப்பட்டதையடுத்து ஒரு கிலோ 50 ரூபாவிலிருந்து 80 ரூபா வரை விற்பனையாகிறது. பச்சை மிளகாயும் 15 ரூபாவிலிருந்து 20 ரூபா வரை விற்பனையாகிறது. மரக்கறி வகைகளின் விலைகளில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் உற்பத்தி செலவும் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதேவேளை வியாபாரிகள் கூடுதலான நன்மை அடைந்து வருகிறார்கள்
Social Buttons