Latest News

April 24, 2015

இலங்கையில் வாழ முடியாது-தமிழகத்திற்கு மீண்டும் சென்ற அகதிகள்!
by Unknown - 0

இலங்கையில் இருந்து மீண்டும் அகதிகள் ஐவர் தமிழகத்திற்கு சென்றுள்ளனர்.

இன்று 5 பேரும் தமிழகத்திற்கு வந்ததாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த காலத்தில் திருகோணமலையைச் சேர்ந்த இவர்கள் ஐவரும், 1999 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையில் இராமேஸ்வரத்திலுள்ள அகதிகள் முகாமில் தங்கியிருந்தனர்.

எனினும் உள்நாட்டுப் போர் முடிந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தாய் நாட்டிற்கு திரும்புவதற்கு ஆர்வம் கொண்ட இவர்கள் சட்டமுறைப்படி இலங்கை திரும்பியிருந்தனர்.

ஆனாலும் இலங்கையில் தாம் இவ்வளவுகாலமாகவும், குறிப்பாக 2010 ஆண்டு நாட்டிற்கு திரும்பி வாழ்ந்த 5 வருடங்களிலும் வசிப்பதற்கு வீடின்றி கஷ்டங்களை அனுபவித்ததாகவும், அங்கு வாழ்வதற்கான சூழ்நிலைகள் மோசமாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசாங்கங்கள் தமக்கு எதையுமே செய்யவில்லை. இதனால் தாம் மீண்டும் அகதிகளாக தமிழகத்தை வந்தடைந்துள்ளதாக இந்தியக் காவற்துறையினரிடம் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை மூன்று வாரத்திற்கு முன்னார் சில அகதிகள் தமிழகத்திற்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
« PREV
NEXT »

No comments